மாளிகைக்காடு ஷேய்கா அப்துல்லாஹ் அல் – ஸயீர் அரபுக்கல்லூரியில் முப்பெரு விழா


எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
மாளிகைக்காடு ஷேய்கா அப்துல்லாஹ் அல் – ஸயீர் அரபுக்கல்லூரி மாணவிகளுக்கான பரிசளிப்பு , இரண்டாம் மாடிக்கட்டிட நிர்மாண பணிகளை ஆரம்பித்து வைத்தல் , அதிதிகள் பாராட்டி கௌரவித்தல் போன்ற முப்பெரு விழா நாளை ஞாயிற்றுக் கிழமை( 2 ) மாளிகைக்காட்டில் இடம்பெறவுள்ளது.

அரபுக்கல்லூரியின் அதிபர் சட்டத்தரணி எம்.ஸி.ஆதம்பாவா தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.திலீப் நவாஸ் பிரதம அதிதியாகவும் , சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா கௌரவ அதிதியாகவும் , காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் , சமய சமூக ஆர்வலர் எம்.பீ.எம்.பரீன் , மாளிகைக்காடு பிஸ்மில்லா ஹோட்டல் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எம்.எம்.தஸ்லீம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வின் போது பாடவிதான அபிவிருத்தி , ஒழுக்க விழுமியங்கள் , கல்லூரிக்கான வருகை , சமய கிரிகை ஒழுங்கு , பாடநூல்களை ஒழுங்காக பேணுதல் , இணைப்பாடவிதான செயற்பாடு , தலைமைத்துவம் ஆகியவற்றில் தமது திறமைகளை வெளிக்காட்டிய இக்கல்லூரியில் கல்வி பயிலும் 60 மாணவிகள் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளதுடன் மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.

மாளிகைக்காடு ஷேய்கா அப்துல்லாஹ் அல் – ஸயீர் அரபுக்கல்லூரி கட்டிட நிர்மாண பணிகளுக்காகவும் நிர்வாக செயற்பாடுகளுக்காகவும் ஜனாபா காலிதா நஸீர் அல் – ஸயீர் தொடர்ச்சியாக நிதியுதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -