உதவி கோரி காவல் நிலையம் வந்த மூன்று குழந்தைகள்..! பொத்துவில் பகுதியில் பேரதிர்ச்சி!!



மூன்று நாட்களாக உணவருந்தவில்லை என தெரிவித்து உதவி கோரி பொத்துவில் காவல்நிலையத்திற்கு மூன்று குழந்தைகள் வந்துள்ள சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளும் 07 வயதுடைய பெண் பிள்ளையொருவரும் தமக்கு பசிப்பதாக தெரிவித்துக்கொண்டு பொத்துவில் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இரண்டு நாட்களாக அவர்களது தாயால் அவர்களுக்கு உணவு ஏதும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
பிள்ளைகளின் தந்தை வௌிநாட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாய்க்கு வேறொருவர் உணவு கொண்டு வந்து தருவதாகவும் , தமக்கு அதனை அவர் தருவதில்லை எனவும் அந்த குழந்தைகள் காவற்துறைக்கு தெரிவித்துள்ளனர்.
பின்னர் , குழந்தைகளுக்கு உணவளித்த காவற்துறையினர் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
அவர் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குழந்தைகளை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கும் வரை அவர்களை உறவினரொருவரின் வீட்டில் ஒப்படைத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -