இலங்கையின் பிரதமருக்கு பொருத்தமானவர் சஜித் பிரமதாஷவே என இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் முகநூல் பக்கம் வெளியிட்ட வாக்கெடுப்பின் 12 மணிநேரத்தில் கிடைத்த வாக்குகளே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
எனவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியினை ரணில் விக்ரமசிங்க உடனடியாக விட்டுக்கொடுத்து கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை விடவும் சஜீத் பிரமதாஷவுக்கு மக்கள் மத்தியில் அதிலும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிக நம்பிக்கை உண்டென்பதனை இக் கருத்துக் கணிப்பில் இருந்து புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.