வீசி இஸ்மாயிலுக்கு பேசப்பட்ட தொகை 48 கோடிகள் என்கிறார் ஊடகவியலாளர் பூமுடீன்

ஏ.எச்.எம்.பூமுதீன்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் - அதன் தலைமைக்கும் துரோகம் இழைக்க முயற்சித்து , இறுதியில் மூக்குடைபட்டுப்போன வீசி இஸ்மாயிலுக்கு வழங்கப்படவிருந்த தொகை மற்றும் அந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்தவர் யார்? போன்ற தகவல்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

பிரதமராக மஹிந்தவை நியமித்த கையோடு - வீசியுடனான கட்சி தாவும் பேச்சும் ஆரம்பித்துள்ளது.

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அந்த பெரும்பான்மையின அமைச்சர் - எந்த அமைச்சு வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இதற்கு நேரடியாக பதிலளிக்காத வீசி - "அமைச்சு மட்டும்தானா"? என வினவியுள்ளார்.

இல்லை..இல்லை பணமும் உண்டு.அது நீங்கள் நினைப்பதை விட அதிகம் என்று கூறியுள்ளார் அந்த அமைச்சர்.

சரி.,யோசித்து கூறுங்கள் எந்த அமைச்சு வேண்டும் என்று கூறிய அந்த அமைச்சரை - வீசி , கடந்த வாரம் சந்தித்து " வர்த்தக" அமைச்சை தாருங்கள் எனக் கேட்டுள்ளார்.

"உங்களுக்கு கெபினட் அமைச்சு தரப்படமாட்டாது.பிரதியமைச்சுத்தான் தரப்படும் என அந்த அமைச்சர் கூறிவிட்டு , கல்வி , உயர்கல்வி பிரதியமைச்ச் கேட்டுவிடாதீர்கள். உங்களை ஊழல் செய்தவர், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை நாசமாக்கியவர்" என்று பாராளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சுமத்தியவர்தான் அதன் கெபினட் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என்றாராம்.

பின்னர் , சுகாதார பிரதியமைச்சை பெற்றுக்கொள்வதென்று இணக்கம் காணப்பட்டது.

பிரதியமைச்சுடன் இவருக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்று சும்மா சொல்லுங்களன் பார்ப்போம்.

உங்களால் கூறவே முடியாது .
இந்த தொகையை பேசியவர் ஒரு முஸ்லிம் அமைச்சர்.
அந்தப் பணம் வெளிநாட்டு வங்கியில் வீசியின் பெயரில் வைப்பிலிட இன்று காலை தயாரானது. அதற்குள்தான் வீசி மூக்குடைபட்டுப்போனார்.

இன்று காலை வைப்பிலிட இருந்த தொகை வெறும் 48 கோடிதான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -