சாய்ந்தமருதில் பல்வேறு சமூக நலத்திட்டங்களில் தன்னை அர்ப்பணித்து செயற்படும் SSDO எனப்படும் சாய்ந்தமருது சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் தில்ஷாத் மெரைன் நிறுவனத்தின் உரிமையாளருமான எம்.வை. பைசர் அவர்களினது “பள்ளிவாசல் சூழலை ஒளிமயமாக்கும்” திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக சாய்ந்தமருது மஸ்ஜிதுல் அல் அக்ஸா பள்ளிவாசல் பிரதேசத்துக்கு பொருத்துவதற்காக 2 LED மின் குமிழ் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த மின்குமிழ் தொகுதி அல் அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவர் ஜப்பார் மொளவி செயலாளர் பாரிஸ் மற்றும் மஹல்லா வாசிகளிடமும் கையளிக்கப்பட்டது. இன்னும் மின்குமிழ் தொகுதிகள் ஏனைய பள்ளிவாசல்களுக்கும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.