சம்மாந்துறை தொகுதியை முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக மன்சூரின் தலைமையின் கீழ் மாற்றியமைக்க வேண்டும்… கட்டாரில் இருந்து சுபைதீன்.


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் -
மகாலத்தில் இலங்கையில் முக்கிய அரசியல் பேசும் பொருளாக மாறியுள்ள எதிரே வருகின்ற மாகாண சபை தேர்தலை பிரதான ஆயுதமாக பயண்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் தலைமையின் கீழ் சம்மாந்துறை தேர்தல் தொகுதியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடைய கோட்டையாக மாற்றியமைக்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரசின் முக்கிய இளம் போராளியும், எம்.ஐ.எம்.மன்சூரின் தீவிர அரசியல் செயற்பாட்டாளருமான எம்.எல்.சுபைடீன் கட்டாரில் இருந்து மேற் கண்டவாறு சம்மாந்துறை வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றார்.

மேலும் குறித்த விடயம் சம்பந்தாக தனது கருத்தினை தெரிவித்த சுபைதீன்….. பூச்சாண்டி அரசியலினை அம்பாறைக்குள் விதைத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரசும் அதன் தலைமையும் பெரும் தலைவர் அஸ்ரஃபின் தாயகமான சம்மாந்துறைக்குள் மக்கள் மத்தியில் அரசியல் பிளவினை ஏற்படுத்தியும், சமூக ஒற்றுமையினை சீர்குளைத்தும் தங்களது சில்லறை அரசியல் கலாச்சாரத்தினை ஏற்படுத்த முனைகின்றனர். இதற்கு சம்மாந்துறை மக்கள் ஒரு பொழுதும் இடமளிக்க கூடாது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் சம்மாந்துறை தொகுதியில் பத்தாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை சூரையாடிய அகில மக்கள் காங்கிரசினால் அம்பாறை மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கூட பெற்றுக்கொள்ள முடியாமல் போன இடத்தில் குறித்த தொகுதியில் சகோதர்ர் மன்சூர் அன்னளவாக 4000 வாக்குகளை பெற்று மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை முஸ்லிம் காங்கிரஸ் காங்கிரஸ் பெற்றுகொள்வதற்கு வழியமைத்தார். இது அம்பாரை மாவட்ட அரசியல் வரலாற்றில் முக்கிய பதிவாகவும், எதிரகால சமூகத்திற்கு சிந்திக்க வைக்க கூடிய வரலாற்று அரசியல் புள்ளிவிபரமாகவும் எழுதப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரசின் தலைமையினதும், சகோதரர் மன்சூரினதும் தக்க சமயத்தில் சாதுரியமான முடிவெடுத்து அரசியல் எனும் போராட்டத்தில் எதிர் நீச்சலின் அடைவுகளை சமூகத்திற்காக வெற்றியடைய செய்யும் தந்திரமாகவே மேற் கூறிய கடந்த பாரளுமன்ற வெற்றி பார்க்கப்படுகின்றது. ஆனால் எல்லாவற்றுக்கும் முற்றிலும் மாற்றமாக பூச்சாண்டி அரசியலினை சம்மாந்துறைக்குள் கொண்டுவந்த அகில இலங்கை மக்கள் காங்கிரசானது, முற்று முழுதாக சகோதரர் மன்சூரினதும் அரசியல் முன்னெடுப்புக்களையும், முஸ்லிம் காங்கிரசினுடைய செல்வாக்கினையும் இல்லாதொழித்து பேரினவாதிகளின் எலும்பு துண்டுகளுக்கும் தாங்கள் நினைக்கின்ற சுக போக வாழ்க்கைக்கும் அடித்தளமிடும் பாரிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் காங்கிரஸ் சம்மாந்துறையில் செயற்பட்ட விதத்தையும், தற்பொழுது அவர்கள் முன்னெடுத்துவரும் பூச்சாண்டி அரசியலின் செயற்பாடுகளையும் பார்க்கின்றேன்.

ஆகவே எதிரே வருகின்ற தேர்தலிம் சம்மாந்துறை தொகுதியை சேர்ந்த படித்த சமூகம், வர்த்தகர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என எல்லோரும் ஒருமித்த குரலின் கீழ் ஒரே குடைக்குள் நின்று செயற்பட்டு சம்மாந்துறை தேர்தல் தொகுதியினை ஸ்ரீ லங்கா முச்லிம் காங்கிரசின் கோட்டையாக மாற்றியமைப்பதற்கும், மாகாண சபையினை தொடர்ந்து குறுகிய கால எல்லைக்குள் எதிர்பார்க்கப்படுகின்ற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் சகோதரர் மன்சூரை அதிக பெரும்மான்மை வாக்குகளுடன் பாரளுமன்ற கதிரையில் உட்கார வைத்து பிரதி அமைச்சு எனும் பதவியுடன் சம்மாந்துறை மண்ணினை சகல துறைகளிலும் அபிவிருத்தி அடைய செய்வதற்கு மன்சூரின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என சம்மாந்துறை மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் மேற் கண்டவாற்ய் தெரிவித்தார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -