அக்கரைப்பற்று முஸ்லிம்கள் மீது இனவாதத் தாக்குதல்.........

க்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்ற முஸ்லிம்கள் மீது சற்றுநேரத்திற்கு முன்னர் ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் தூண்டுதலில் பேரில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவர்களின் மோட்டார் பைசிக்கிள்களும் நாசப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழர்களிடமிருந்து முஸ்லிம் காணி வாங்கக் கூடாது, மீறி வாங்கினால் கொலையும் கெய்வோம் எனவும் அச்சுறுத்தல் மேகொள்ளப்பட்டே இவ்வினவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பொலிசார் ஸ்தலத்திற்கு சென்றுள்ளனர். இது தொடர்பாக ஏலவே ஒரு தடவையும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலே, இன்றைய இத்தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வந்தவர்கள் கறுப்பு சீலையால் முகத்தை மூடிக்கொண்டு வந்து திட்டமிட்ட வகையில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயப்பட்டோர் விபரம்

1) சமீம் - உரிமையாளர்
2) ஜம்சீத் அலி (பிறண்டர்ஸ்)
3) மும்தாஸ் (கொங்கிறீட் கட்டார்)
4) நிசாம் (குயில் மாமா)
5) றிக்காஸ் (நசுஹூவின் மகன்)
6) ஹிப்பதுல் கரீம் (சியாம்) 

தகவல் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம்








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -