பலசரக்கு கடையில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ.வீ கெமராவை உடைத்தெறிந்து மூன்று இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணம் கொள்ளை

க.கிஷாந்தன்-
கொட்டகலை ரொசிட்டா பிரதான நகரத்தில் கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக உள்ள பலசரக்கு கடை ஒன்றின் மூன்று இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கொள்ளை சம்பவம் 20.06.2018 அன்று நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சீ.சீ.டீ.வீ கெமராவின் பதிவு உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேவேளை, குறித்த பலசரக்கு கடையில் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியவர் நுதனமான முறையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ.வீ கெமராவை இயக்கவிடாமலும், உடைத்தெறிந்தும் விட்டு கடைக்குள் நுழைந்து மிகவும் சூட்சமான முறையில் கடையில் இருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்த கடை உரிமையாளரின் முறைபாட்டை ஏற்று ஸ்தலத்திற்கு விரைந்த திம்புள்ள பத்தனை மற்றும் நுவரெலியா விசேட பொலிஸின் கைரேகை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -