இரு மணி நேரத்தில் நாடு இரத்த பூமியாகும் என்கிறார் பொதுபலசேனா ஞானசார..!

மிழர் ஒருவர் நாட்டை ஆட்­சி­செய்திருந் தால் இந்­த­ள­வுக்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தின் ஆபத்­துக்­களை மக்கள் எதிர்­கொண்­டி­ருக்க மாட்­டார்கள் . இரண்டு மணித்­தி­யா­லத் தில் நாட்டை இரத்த பூமி­யாக மாற்றும் அள­விற்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் தொடர்­பான தக­வல்கள் எம்­மிடம் உள்­ளன என்று பொது­ப­ல­சேனா அறி­வித்­துள்­ளது.

முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தின் ஆக்­கி­ர­மிப்­புகள் நாட்டில் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. கிந்­தோட்டை போன்ற சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் இலங்­கையில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் ஏற்­படும் ஆபத்து உள்­ளது. எனவே உட­ன­டி­யாக சர்­வ­கட்சி குழுவை கூட்டி முஸ்லிம் அடிப்­ப­டை­வாத பிரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அந்த அமைப்பு குறிப்­பிட்­டுள்­ளது.

ராஜ­கி­ரிய - நாவல வீதியில் அமைந்­துள்ள பொது­ப­ல­சேன அலு­வல கத்தில் நேற்று செவ்­வாய்­கி­ழமை இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

இதன் போது உரை­யாற்­றிய பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கூறு­கையில் ,

பயங்­க­ர­வா­தத்­திற்கு சாய­லான முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் நாட்டில் விஸ்­த­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்த தக­வல்­களை பல முறை வெளிப்­ப­டுத்­திய போதிலும் உரிய வகையில் நட­வ­டிக்­கைகள் எந்­த­வொரு அரச தலை­வ­ரி­னாலும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் திட்­ட­மிட்டு முன்­னெ­டுக்­கப்­படும் அடிப்­ப­டை­வா­தத்தின் பின்­ன­ணியில் உள்ள அர­சியல் நிழல்­களை நாம் அறிவோம். வன்­மு­றைகள் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வாக அமை­யாது என்ற நிலைப்­பாட்டில் பொது­பல சேனா செயற்­ப­டு­கின்­றது.

முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பகு­திகள் அதி­யுயர் பாது­காப்பு வல­யங்­களா? அங்கு விபத்­துக்கள் இடம்­பெற கூடாதா ? அவ்­வாறு விபத்­துக்கள் இடம்­பெற்றால் முஸ்­லிம்­க­ளுக்கு தாக்­கு­வ­தற்கு என்ன உரி­மை­யுள்­ளது. கிந்­தோட்டை பகு­தியில் இடம்­பெற்ற சாதா­ரண விபத்தை வன்­மு­றை­யாக்­கி­யது யார் ? என்ற உண்மை கண்­ட­றி­யப்­பட வேண்டும். மாளி­கா­வத்தை, அக்­கு­ரண மற்றும் தர்கா நகர் உள்­ளிட்ட முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பகு­திகள் அதி­யுயர் பாது­காப்பு வல­யங்கள் போன்று காணப்­ப­டு­வதை ஏற்க முடி­யாது.

மாணி­கக்கல் வியா­பா­ரிகள் அதிகம் கூடும் இட­மாக காணப்­படும் கிந­தோட்­டையில் சிறு சிறு குழுக்­க­ளாக வீதி ஓரங்­களில் வியா­பா­ரிகள் நிற்­பார்கள். அதே போன்று வீதி ஓரங்­களில் சிறிய கடை­க­ளையும் வைத்­தி­ருப்­பார்கள். மேலும் எவ்­வி­த­மான அறி­விப்பும் இல்­லாமல் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் வாக­னங்­களை நிறுத்த கூடாது என பதா­தை­களும் வைக்­கப்­பட்­டுள்­ளன . நாட்டில் உள்ள சட்ட ஒழுங்கு அமைச்­சிக்கோ பொலி­ஸா­ருக்கோ இந்த விட­யங்கள் கண்­க­ளுக்கு தெரி­வ­தில்லை.

வாகன போக்­கு­வ­ரத்­திற்கு பெரிதும் பாதிப்­பாக காணப்­படும் இவ்­வா­றான இடங்­களில் விபத்­துக்கள் இடம்­பெ­று­வது பொது­வான விட­ய­மாகும். கிந்­தோட்டை விபத்தும் இவ்­வா­றா­ன­தொரு சாதா­ரண விபத்­தாகும். பாரிய உயிர் சேதம் ஏற்­ப­டுத்தும் ஒன்­றாக அது அமை­ய­வில்லை. ஆனால் விபத்து ஏற்­ப­டுத்­திய இளை­ஞர்­களை வீதி­களில் கூடி­யி­ருந்த குழு­வினர் தாக்­கி­யது எவ்­வி­தத்தில் நியா­ய­மாகும். பௌத்த மக்கள் மிகவும் பொறு­மை­யா­ன­வர்கள். அலவ்வ பகு­தியில் இடம்­பெற்ற சிறிய விபத்தை காரணம் காட்டி சம்­மந்­தப்­பட்ட இளை­ஞனை பள்­ளி­வா­ச­லுக்குள் அழைத்து சென்று ஷரியா சட்­டத்தில் தண்­டித்­துள்­ளனர்.

அடிப்­ப­டை­வா­தி­களின் இவ்­வா­றான விட­யங்கள் அறிந்தும் பொறுமை காத்து வரு­கின்றோம். கிந்­தோட்டை போன்ற சம்­ப­வங்கள் நாட்டில் ஏனைய பகு­தி­க­ளிலும் நடக்­கலாம். பயங்­க­ர­வா­தத்­திற்கு சாய­லான அடிப்­ப­டை­வாத்­தினால் நாடு பேரா­பத்தில் உள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் குறு­கிய அர­சியல் நலன்­களை கொண்டு சிந்­திக்­காமல் இந்த விட­யத்தை மிகவும் கவ­ன­மாக கையாள வேண்டும்.

முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தின் ஆக்­கி­ர­மிப்­புகள் நாட்டில் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. உண்­மை­களை நீண்ட நாட்­க­ளுக்கு மறைக்க முடி­யாது. முஜுபுர் ரஹுமான் மற்றும் ரிஷாட் பதி­யுதீன் போன்­ற­வர்கள் சிந்­தித்து செயற்­பட வேண்டும். நல்­லாட்சி பொரு­ளி­ழந்து செயற்­பட கூடாது. அர­சி­ய­ல­மைப்பு, சட்­டங்கள் மற்றும் எமது கலா­சார பாரம்­ப­ரி­யங்­க­ளுக்கு பேரா­பத்தை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான ஆக்­கி­ர­மிப்­புகள் அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இவற்றின் வெளிப்­பா­டு­க­ளாக பல்­வேறு சம்­ப­வங்­களும் ஆதா­ரங்­க­ளையும் எம்மால் கூற முடியும். திரு­டர்கள் எப்­போதும் அச்­சத்­து­ட­னேயே இருப்­பார்கள். அதே போன்று முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களும் சிறிய விட­யத்தை பெரி­தாக்கி தம்மை பாது­காத்து கொள்­வ­தற்­காக சமூக வலை­யத்­த­ளங்­களில் பௌத்த மக்­க­ளுக்கு எதி­ரான பிர­சா­ரங்­களை செய்­கின்­றனர். ஆனால் தேர்­தலில் வாக்­குகள் குறைந்து விட கூடாது என்­ப­தற்­காக எமது அர­சியல் தலை­வர்கள் வெட்­கிக்கும் வகையில் வேடிக்கை பார்க்­கின்­றனர்.

நாடு சுதந்­திரம் பெற்று 70 ஆண்­டு­க­ளா­கியும் அடிப்­ப­டை­வாத்தில் இருந்து வெ ளிவர முடி­ய­வில்லை. புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக பேசு­ப­வர்கள் அதில் ஷரியா சட்டம் , பர்தா விவ­காரம் மற்றும் ஹலால் உள்­ளிட்­டவை ஒழிக்­கப்­பட வேண்டும் என்ற விட­யங்­களை. உள்­ள­டக்­க­வில்லை. எமது தலை­வர்­களின் செயற்­பா­டுகள் மிகவும் இழி­வாக உள்­ளன. ஒரு தமிழன் நாட்டை ஆண்­டி­ருந்தால் நிச்­ச­ய­மாக இவ்­வா­றன அடிப்­ப­டை­வா­தத்­திற்கு இட­ம­ளிக்­காது பௌத்த மக்களை சிறந்த வகையில் பாதுகாத்திருப்பார்.

எல்லை நிர்ணய பணிகளை முஸ்லிம் ஒருவருக்கு கொடுத்துள்ளனர். எல்லை நிர்ணயம் எவ்வாறு காணப்படும் என்று சிந்தித்து பாருங்கள் . ஆகவே வேடிக்கை பார்த்தது போதும். உடனடியாக சர்வகட்சி குழுவை கூட்டி முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாட வேண்டும். போதுமான ஆதாரங்கள் பொதுபல சேனா வசம் உள்ளன.

எனவே பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்காமல் உடனடியாக பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். இல்லை என்றால் பெரும் வன்முறை தலைத்தூக்கும் நிலை ஏற்படலாம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -