மயிலிட்டி பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் விமான எதிர்ப்பு துப்பாக்கி ரவைகள் ஒருத்தொகையை காங்கேசன்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்




நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-

காங்கேசேன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பிரதேசத்தில் விமான எதிர்ப்பு துப்பாக்கி ரவைகள் ஒருத்தொகையை காங்கேசன்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பாழடைந்த கிணற்றை சுதம் செய்தவர்களினால் வழங்கப்பட்ட தகவலையடுத்தே 25.09.2017 மதியம் பொலிஸாரினால் மேற்படி துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது .

காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் சிசிரகுமார. பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி அபேரத்தன .54003 அமிர்தலிங்கம் உள்ளிட்ட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு நடவடிக்கையின் போது
67 பெட்டிகளில் தலா 85 ரவைகள் வீதம் 5695 ரவைகளை கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ரவைகள் தொடர்பிலான மேலதிக விசாரணையை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -