அய்ஷத்-
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளாராக, உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த திருவளார் T.ஜகொப் அதிசயராஜ் (SLAS) அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியமனத்திற்கான கடிதம் இன்று (ஒகஸ்ட் 18) கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2017.03.03 தொடக்கம் முற்திகதியிடப்பட்டு பதிலீட்டு அடிப்படையில் பிரதேச செயலாளராக கடமையாற்றுமாறு அந் நியமன கடித்தத்தின் மூலம் பணிக்கப்பட்டுள்ளது. சுமார் ஏழு மாதங்களாக பிரதேச செயலாளரின்றி இயங்கி வந்த அட்டாளைச்சேனைப பிரதேச செயலகத்திற்கு அனைவரினதும் அபிமானம் பெற்ற திரு.TJ.அதிசயராஜ் அவர்கள் நியமனம் பெற்றதையிட்டு பிரதேச மக்கள் மனமுவந்து வாழ்த்துகிறார்கள்.
அவர் உத்தியோகவூர்வமாக தனது கடமைகளை எதிரவரும் திங்கட்கிழமை (ஓகஸ்ட் 21) ஏற்கவுள்ளார். அவரை நாமும் வாழ்த்தி மகிழ்கிறோம்.