துவிச்சக்கரவண்டி விபத்து - இரு சிறுவர்கள் படுங்காயம்

க.கிஷாந்தன்-
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை சமர்செட் பகுதியிலிருந்து லிந்துலை நகரத்தை நோக்கி சென்ற துவிச்சக்கரவண்டி ஒன்று 24.07.2017 அன்று மாலை 5 மணியளவில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பாலத்தில் வீதியை விட்டு விலகி சுமார் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் இருவர் படுங்காயம்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

படுங்காயம்பட்ட சிறுவர்கள் இருவரும் உடனடியாக லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். துவிச்சக்கரவண்டியில் தடுப்புக்கட்டை செயழிழந்ததன் காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு விபத்தக்குள்ளாகியவர்கள் லிந்துலை சமர்செட் பகுதியை சேர்ந்த ரக்ஸான் (வயது – 10) ஜனன திஸாநாயக்க (வயது 15) என தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -