கட்டார் மீதான தடையை நீக்க வளைகுடா நாடுகள் 13 நிபந்தனைகளை முன்வைத்துள்ளன.
குவைத் நாட்டின் மூலம் இந்த நிபந்தனை பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் உறவைக் குறைத்துக்கொள்வது, கட்டாரிலுள்ள துருக்கிய இராணுவத் தளத்தை மூடுவது, கட்டார் வட்டாரத்தில் உள்ள பயங்கரவாதிகள் அனைவரையும் தங்களிடம் ஒப்படைப்பது போன்ற 13 விடயங்கள் அந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.அவற்றை நிறைவேற்ற கட்டாருக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கட்டார் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக தெரிவித்து சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து ஆகிய வளைகுடா நாடுகள் கட்டாருடனான தொடர்புகளை துண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.