கட்டார் மீதான தடையை நீக்க 13 நிபந்தனைகள் விதிப்பு - 10 நாள் அவகாசம்

கட்டார் மீதான தடையை நீக்க வளைகுடா நாடுகள் 13 நிபந்தனைகளை முன்வைத்துள்ளன.

குவைத் நாட்டின் மூலம் இந்த நிபந்தனை பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் உறவைக் குறைத்துக்கொள்வது, கட்டாரிலுள்ள துருக்கிய இராணுவத் தளத்தை மூடுவது, கட்டார் வட்டாரத்தில் உள்ள பயங்கரவாதிகள் அனைவரையும் தங்களிடம் ஒப்படைப்பது போன்ற 13 விடயங்கள் அந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.அவற்றை நிறைவேற்ற கட்டாருக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கட்டார் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக தெரிவித்து சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து ஆகிய வளைகுடா நாடுகள் கட்டாருடனான தொடர்புகளை துண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -