காவத்தை பதற்ற நிலை - 03 வீடுகள் தீக்கிரை

காவத்தை பகுதியில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து அப்பிரசேத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காவத்தை, எந்தான தோட்டத்தில், கப்பெல பிரிவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், பணப் பரிமாற்றமே இந்த மோதலுக்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், 3 வீடுகளுக்கு தீ மூட்டப்பட்டமையினால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -