ஞானசாராவை நாய்க்கூண்டில் அடைப்போம் என்று எச்சரிக்கை விட்டவர்கள் எங்கே..?

ந்த ஞானசாராவின் செயல்பாடுகளை மஹிந்த ஆட்சியின் போது கடுமையாக விமர்சித்த முஜிவுர் ரஃமான் அஸாத்சாலி போன்றோர் இன்று என்னசெய்கின்றார்கள். ஞானசாராவின் கொட்டத்தை அடக்குவதாக இருந்தால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று கூக்குரல் இட்டார்கள். அதே நேரம் எங்கள் ஆட்சி வந்தால் ஞானசாராவை நாய்க்கூண்டில் அடைப்போம் என்றும் எச்சரிக்கை விட்டிருந்தார்கள்.

நல்லாட்சியின் ஜனாதிபதியும் ரணிலும் முஸ்லிம் பிரதேசங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது இந்த இனவாதிகளை கட்டுப்படுத்துவோம் என்று கூறியது மட்டுமல்ல அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் மத நல்லினக்கச் சட்டத்தை கொண்டுவருவோம் என்றும் கூறியிருந்தார்கள்.

இப்படி கூறியவர்கள் இப்போது எங்கே..?

நல்லாட்சியில் ஜனாதிபதியோடு மிகநெருக்கமாக இருக்கும் அஸாத்சாலி அவர்களும், பிரதமர் ரணிலோடு மிகநெருக்கமாக இருக்கும் முஜிவுர் ரஃமானும், இன்று முஸ்லிம்களுக்கு ஞானசாராவின் மூலம் பிரச்சினைகள் வருகின்றபோது ஜனாதிபதியிடமோ அல்லது பிரதமரிடமோ சென்று தீர்வை பெறுவதற்கு பதிலாக பொலிசாரிடம் சென்று முறைப்படுகின்றார்கள் இவர்களுடைய இந்த செயல்பாடு எதனைக்காட்டுகின்றது.

இவர்கள் தங்களுடைய நலனுக்காகவும், தங்களுக்கு பிடித்தமான ஆட்சியை கொண்டுவருவதற்காகவும் முஸ்லிம் சமூகத்தை தவறான பாதைக்கு இட்டுச்சென்று தங்களுடைய காரியத்தை சாதித்துக்கொண்டவர்கள். இப்போது அதே பிரச்சினைகள் தலைதூக்குகின்றபோது அதனை எதிர்கொள்ள முடியாமல் பூச்சாண்டி காட்டிக்கொண்டு, விலாங்கு மீனின் செயல்பாடுபோல் நடந்து கொள்கின்றார்கள்.

இவர்கள் மட்டுமல்ல இவர்களைப்போல் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் நாங்கள் என்று கூறிக்கொள்பவர்களும் இதே பூச்சாண்டியைத்தான் காட்டிக்கொண்டு தங்களுடைய பதவிகளையும் பட்டங்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இவர்களின் நோக்கங்கள் எல்லாம் முஸ்லிம்களின் வாக்குகளைப்பெறுவதற்கு மட்டுமே முஸ்லிம்கள் அவர்களுக்கு தேவை, மற்றப்படி அவர்களை யார் பந்தாடினாலும் அந்த நேரம் குரல் கொடுப்பது மாதிரி குரல் கொடுத்து நாடகமாடிவிட்டு, கொஞ்ச காலம் சென்றதன் பிற்பாடு முஸ்லிம்கள் எல்லா விடயத்தையும் மறந்துவிடுவார்கள், அதன் பின் அவர்களிடம் சென்று திரும்பவும் வாக்குகேட்கலாம் என்ற நம்பிக்கையில் வாழ்பவர்கள்.

இவர்களை நம்பி முஸ்லிம் சமூகம் ஏமாந்தது போதும், இனிமேலாவது இவர்களுடைய சதித்திட்டத்தை புரிந்து கொண்டு, இவர்கள் காட்டும் நாடகத்துக்கு மக்கள் செருப்படி கொடுக்க முன்வர வேண்டும், அப்போதுதான் எம்மைத் தாக்கும் எதிரிகளும் பின்னடைவார்கள்.இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையைக் கண்டு இனிமேல் எமக்கு சேவை செய்ய முன்வரும் ஏனையோரும் பயப்பிடுவார்கள்.

ஆகவே, இந்த நாடகமாடிகளை முஸ்லிம் சமூகம் இனம் கண்டு ஒதுக்காதவரை, இறைவனின் உதவியும் கிடைக்காது என்பதே எங்கள் கருத்தாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -