தைக்கா நகர் அட்டாளைச்சேனை 16இல் நேற்று (20.03.2017) பிற்பகல் சுமார் 3 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் மரணமானார். இவரது உடலை இதுவரை யாரும் உரிமை கோராதது கவலையான விடயமாகும். இது குறித்து விபத்து இடம்பெற்ற பகுதியில் எமது செய்தியாளர் விரசாரித்த பொழுது :
குறித்த பகுதிக்கு யாசகம் எடுப்பதற்காகவே இவர் வந்துள்ளதாகவும் விபத்து இடம்பெற்ற நேரத்தில் குறித்த வயோதிபர் அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியினை கடக்க முட்பட்டவேளையிலேயே இவ் விபத்து இடம்பெற்றதாக தெரிவித்தனர்.
குறித்த வயோதிபர் பேரூந்துக்காக காத்து நின்று அப்போது சாணம் ஏற்றிவந்த லொறியினை பேரூந்தாக நினைத்து அதில் ஏறுவதற்காக முட்டபட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று (21.03.2017) மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமை புரியும் அப்துல் வஹாப் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது ;
குறித்த வயோதிபர் தொடர்பில் எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் விபத்து தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறித்த வயோதிபரின் உடலினை இதுவரை யாரும் உரிமை கோரவில்லை எனவும் தெரிவித்தார்.
எனவே அடையாளம் தெரிந்தவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை 067 22 77 213 இலக்கத்துக்கோ அல்லது 075 708 1317 (அப்துல் வஹாப் ) எனும் இலக்கத்துக்கோ அழைத்து விபரம் தெரிந்து கொள்ளாம்.
cctv video