சாய்ந்தமருதில் இன்று இடம்பெற்ற சோக சம்பவம் - துப்பட்டா இறுகி சிறுவன் மரணம்

ல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் இரு சிறுவர்கள் (சகோதரர்கள்) விளையாடிக்கொண்டிருந்த போது ஒரு சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த சிறுவர்கள் சுகயீனம் காரணமாக இன்று பாடசாலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளனர். குறித்த சிறுவர்களின் பெற்றோர்கள் அரச ஊழியர்கள் என்பதனால் அவர்கள் வேலை நிமித்தம் வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இச்சமயத்தில் வீட்டில் இருந்த இரு சிறுவர்களும் தன் தாயின் துப்பட்டாவினைக்கொண்டு விளையாடியுள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக ஒரு சிறுவனின் கழுத்தில் துப்பட்டா மாட்டி கழுத்து இறுகி உயிர் பிரிந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

”இன்னாலில்லாஹி வயின்னா இலைஹிர்ராஜிஊன்”

மேலதிக விசாரணையை கல்முனை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -