பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் வடிகான்களுக்கு மூடி இடுவதற்குரிய நடவடிக்கை..!

எம்.ரீ.ஹைதர் அலி-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூராக காத்தான்குடி பிரதேசத்தின் சில வீதிகளில் சேதமடைந்த நிலையில் காணப்படும் வடிகான்களுக்கான மூடிகளை திருத்தம் செய்து தருமாறு வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தனர்.

இதற்கமைவாக பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக 2017.01.05ஆந்திகதி - வியாழக்கிழமை (இன்று) காத்தான்குடி நகரசபையின் செயலாளர் ஸபி அவர்களுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் காத்தான்குடி பிரதேசத்திற்குற்பட்ட கடற்கரை வீதி, அல்-அமீன் வீதி, கர்பலா வீதி, தாருஸ்ஸலாம் வீதி, அமானுல்லா வீதி, ஜாமியுள் ஆபிரீன் வீதி, அரபு கலாசாலை வீதி, ஊர்வீதி மற்றும் வாவிக்கரை வீதி போன்றவற்றில் காணப்படும் சேதமடைந்த வடிகான் மூடிகள் மற்றும் மூடிகள் இடப்பட வேண்டிய வடிகான்கள் போன்றவற்றை நேரில்சென்று பார்வையிட்டார்.

இதற்கமைவாக காத்தான்குடி பிரதேசத்தில் இனங்காணப்பட்ட 19 இடங்களில் சேதமடைந்த நிலையில் காணப்படும் வடிகான் மூடிகளை துரிதமாக புனரமைப்பு செய்து எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் புதிய மூடிகளை இடுவதற்கான நடவடிக்கைகள் காத்தான்குடி நகரசபையினால் மேற்கொள்ளப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -