அய்ஷத் ஸெய்னி-
இளம் கவிஞர் "பாலமுனை முபீத்" ன் "மரணத்தை கீறும் பேனா" கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வும் கெளரவிப்பு விழாவும் நாளை 2017.01.07 சனிக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலய அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் கௌரவ கிழக்கு மாகண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ அல்ஹாஜ் சட்டமுதுமாணி கவிஞர் ரவூப் ஹக்கீம் (பா.உ) தேசியத் தலைவர் SLMC. நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் அமைச்சர் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன்
முன்னிலை அதிதிகளாக கலாபூசணம் பாஏந்தல் பாலமுனை பாறூக் அவர்களும் கலாபூசணம் கவிஞர் அன்புடீன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு விழா வெற்றி பெற ஒத்துழைப்பு வழங்குமாறு நூலாசிரியர் பாலமுனை முபீத் அழைக்கிறார்.