வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களுக்கு இலங்கை அரசு கொடுக்கும் பரிசு..!!

வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களுக்கு தை மாதம் முதல் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களுக்கு தை மாதம் முதல் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதேவேளை பயிற்றப்பட்டவர்களை வெளிநாட்டு தொழிலுக்கும் அனுப்பும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவிருக்கின்றோம் .

முன்னதாக வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலின்போது தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் எதிர்வரும் ஜனவரி முதல் ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

பங்களிப்பு முறையிலான இந்த ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களிடம் இருந்து 2வருடங்களுக்கு 50ஆயிரம் ரூபா பங்களிப்பாக பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -