இலங்கையைச் சேர்ந்த முஹமட் றாபி கட்டாரில் ஜனாஸாவாக மீட்பு : இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது

டதலவின்ன பகுதியைச் சேர்ந்த சுமார் 38 வயதுடைய " முஹமட் றாபி" எனும் நபர் கட்டாரில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்! கடந்த மூன்று நாட்களாக எவ்வித தொடர்புமற்ற நிலையில் காணாமல் போன மேற்படி நபர் இன்று கட்டாரில் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்!

இது ஒரு கொலை சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் இலங்கையை சேர்ந்த இருவரை கட்டார் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்! "மரண பரிசீலனை" செய்வதற்காக ஜனாஸா வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது! உயிரிழந்த நபருக்கு திருமணமாகி 
3 பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது!

அவரது மறுமை நல்வாழ்வுக்காகவும், குடும்பத்தாரின் ஆறுதலுக்காகவும் பிரார்த்திப்போம்!

தகவல் : அல்மஷூறா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -