இப்படியும் ஒரு பெண் : இளைஞனை மிரட்டி உறவு கொண்டதாக வழக்கு பதிவு.!

த்தரப்பிரதேசத்தில் 16 வயது இளைஞன் ஒருவனை 23 வயது பெண் ஒருவர் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

தன்னை அந்த பெண் மிரட்டி உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும் அந்த 16 வயது இளைஞர் புகார் அளித்தார். இதனையடுத்து, அந்த 23 வயதான பெண் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ், மைனர் மீது பாலியல் அத்துமீறல், கொன்று விடுவதாக மிரட்டுவது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து கூறிய பொலிஸார், குற்றம் சுமத்தப்பட்ட அந்த பெண் வீடியோ ஒன்றை வைத்துக்கொண்டு, அந்த இளைஞனை மிரட்டி உடலுறவு வைத்துக் கொண்டார், திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவித்ததாக கூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -