வர்த்தகர் சகீப் சுலைமானின் கொலைக்குக் காரணம் இதுவா..? சீ.சீ.ரி.வி.கமராக்கள் சோதனை

ம்பலபிட்டி , கொத்தலாவல எவனியூ பகுதியில் வைத்து கடத்தப்பட்ட நிலையில் மாவனல்லையில் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் கடத்தல் மற்றும் படுகொலைக்கு காரணமாக - 40 மில்லியனுக்கும் மேற்பட்ட கொடுக்கல் வாங்கல் ஒன்றினை மையப்படுத்தி இடம்பெற்றதா என பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெள்ளவத்தை பிரதேசத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரிடம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை நாடத்தி வருவதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வெள்ளவத்தை பகுதியில் மேலும் இரு வர்த்தகர்களிடமும் பொலிஸார் விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளதாக குறித்த உயர் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை விட மேலதிக விசாரணைகளுக்காக கொள்ளுபிட்டியில் இருந்து தெஹிவளை வரையிலான அனைத்து சீ.சீ.ரி.வி. கமராக்களையும் சோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ள விசாரணையாளர்கள் அது தொடர்பில் பிரத்தியேகமாக மூன்று பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி மொத்தமாக இவ்விசாரணைகளுக்கு என 11 பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிராந்தியத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந் நிலையில் கோடீஸ்­வர வர்த்­தகர் சகீப் கடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட விவ­காரம் குறித்து குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் கேகாலை பிராந்­திய பொலிஸ் அத்­தி­யட்சர் ஆகி­யோரின் கீழ் 8 சிறப்புக் குழுக்கள் அமைக்­கப்­பட்டு விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. நேற்று மாலை­யாகும் போதும் இந்த விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­பட்ட சந்­தேக நபர்­க­ளாக இருக்­கலாம் எனும் சந்­தே­கத்தில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­னரால் வெள்­ள­வத்தை, தெமட்­ட­கொடை மற்றும் காலி வீதி பகு­தி­களைச் சேர்ந்த ஐவர் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள நிலையில் அவர்கள் நாட்­டி­லி­ருந்து தப்பிச் செல்­வதை தவிர்க்கும் முக­மாக கட­வுச்­சீட்­டுக்கள் முடக்­கப்­பட்­டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இது தொடர்பான முந்திய செய்திகளுக்கு இதை அழுத்தவும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -