சூரியவெவ பிரதேசத்தில் சிறுநீர், இரத்தமாதிரிகளை தனியார் வைத்தியசாலையொன்றில் பரிசோதித்த 35 வயதுடைய ஆண் நபர் ஒருவருக்கு கர்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவ அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
அவரது மருத்துவ அறிக்கையில் அவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததால் அவர் அதிர்ச்சியுடன், வெட்கமும் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவ பரிசோதனை நிலையத்தை நடாத்திச் செல்லும் இடத்தில் உள்ள இரசாயன ஆய்வுகூடத்தில் சாதாரணதரம், உயர்தரம் படித்தவர்களே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர்களால் வழங்கப்படும் மருத்துவ அறிக்கைகளால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இச் செய்தியானது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.க.நி-