நாளை திருமணம் - இன்று திருமண ஜோடி மரணம்

வீட்டை விட்டு ஓடிப்போனதாக கூறப்பட்ட அநுராதபுரத்தைச் சேர்ந்த 21 வயதான ருவான் குமார என்ற இளைஞனும், பொலன்னறுவையைச் சேர்ந்த 19 வயதான அயேஷா என்ற யுவதியும், அநுராதபுரம், புதபிம மஹாபுலன்குளப் பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இன்று திங்கட்கிழமை (27) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

காதலித்து வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், இருவரையும் வீட்டினர் சாமாதனப்படுத்தி திருமண பேச்சுக்களை முடித்துள்ளனர்., நாளை செவ்வாய்க்கிழமை (28) திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவிருந்த வேலை இவர்கள் அனுராதபுர சிறிய குளம் ஒன்றில் குளிக்க சென்றுள்ளனர்.

பின்னர் தாமரை பறிக்கும் தோணி ஒன்றில் ஏறி குளத்தை சுற்றி வந்துள்ளனர். குளத்தின் நடுப்பகுதியில் வைத்து அந்த தோணி புரண்டுள்ளது இருவரும் நீரில் விழுந்துள்ளனர்.. அதனை கரையில் இருந்து அவதானித்த சிறுவர்கள் இவர்கள் விளையாட்டுக்கு இவ்வாறு செய்கிறார்கள் என நினைத்து உதவிக்கு யாரையும் அழைத்தில்லை.

இன்று குளத்தில் மூழ்கிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -