அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- ரொட்டவெவ பள்ளி வாசலுக்கு முன்னாலுள்ள கடைத்தொகுதியில் உறங்கிக்கொண்டிருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கேரளா கன்ஜா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இன்று (23) காலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்னர்.
இவ்வாறு கைது செய்யப்பட்வர் கெப்பித்திக்கொள்ளாவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றிம்ஹொரவ்பொத்தான-மரதன்கடவெல பகுதியைச்சேர்ந்த இந்திக ஜெயசிங்ஹ (35 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் ரொட்டவெவ பள்ளி வாசலுக்கு முன்னாலுள்ள கடைத்தொகுதியில் இரவில் தூங்கிவிட்டு அதிகாலை எழும்பி கன்ஜாவை பாவித்து வருவதாக பொலிஸருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சோதனையிட்ட பொலிஸார் கேரளா கன்ஜாவினையும் மீன் பிடிக்க பயன்படுத்தும் தங்கூசி வலையினையும் கைப்பற்றியுள்ளனர்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இவர் மீன்பிடிப்பதற்காக வரும் மீணவர் போல மீன் வலைகள் போடும் பேக்கினுள் கன்ஜாவை கொண்டு வந்து குளத்தில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று திருகோணமலை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டும் வருகின்றனர்.