குவைத் நாட்டில் பனிபுரியும் வீட்டுப்பணிப்பெண் ஒருவர் தொழில் தருனருக்கு தயாரிக்கும் ஜூசில் சிறுநீரை கலந்து கொடுத்துள்ளதாக ஒரு பெண் கைது செய்யப்பட்ட நிலையில் இதுதான் குறித்த சம்பவம் தொடர்பான வீடியோ என ஒரு வீடியோ காட்சி தற்போது குவைத் இணையதளங்களில் வெளியாகி குவைத் எஜமானர்களை அதிர வைத்துள்ளது.
வீட்டுப்பணிப்பெண்னின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட தொழில் தருனர் சமயலறையில் ரகசிய கெமராவை பொருத்தியுள்ளதாக ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேவேளை குவைத் உட்பட அரபு எஜமானர்கள் தம் வேலையாட்களை கடுமையாக நடத்துவதால் தான் அவர்கள் இவ்வாறு பழி வாங்குகிறார்கள் என்று பலரும் சமூக வலையத்தளங்களில் கருத்தும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.