உம்ராவுக்கு செல்வோரின் கவனத்திற்கு - சவூதி அரசாங்கத்தின் அதிரடி முடிவு

ம்ரா கடமைக்காக சவூதி அரேபியா செல்லும் யாத்ரீகளுக்கு தனது கடமை முடிந்தவுடன் உம்ரா வீசாவை சுற்றுலா வீசாவாக மாற்றிக்கொள்ளும் அனுமதியை சவூதி அரசாங்கம் அனுமதித்து நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது. தேசிய சுற்றுலா மற்றும் பாரம்பரிய தளங்களுக்கான ஆணைக்குழுவின் தலைவர் இளவரசர் சுல்தான் பின் சல்மான் இதனை ஆரம்பித்து வைத்தார்.

முஸ்லிம்களுக்கான சுற்றுலாத்தளமாக இராச்சித்தை மாற்றும் முகமாக இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

தனது உம்ரா கடமையை முடித்தவுடன் உம்ரா விசாவில் ஜித்தாவை தவிர நாட்டில் வேறு இடங்களுக்கு செல்லும் அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை. 

இதன்படி நாட்டில் உள்ள வரலாற்று சம்பந்தப்பட்ட இடங்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் தமக்கு விருப்பமான பொருற்களை வாங்கும் தேவைகளையும் முடித்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -