நவம்பர் 27 முதல் 29 வரை சாய்ந்தமருதில் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டலும் புத்தகக் கண்காட்சியும்..!

எம்.வை.அமீர் -
திர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பங்குபற்றுதலுடன் Knowledge ForceInternational மாபெரும் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டலும் புத்தகக் கண்காட்சியையும் நடத்தவுள்ளது தொடர்பான விடயங்களை பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் 2015-10-17 அன்று Knowledge Forceநிறுவனத்தின் பணிப்பாளர் இஸ்ரத் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கருத்துத்தெரிவித்த இஸ்ரத் இஸ்மாயில், கிழக்கு மாகாணத்தில் The biggest education, Job & Book Fair in the Eastern Province of Srilanka எனும் தலைப்பில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள், தொழில் புரிகின்றவர்கள் என பலருக்கும் பயனுள்ளதாக அமையவுள்ளது என்று தெரிவித்தார். மேலும் இக்கண்காட்சியை பார்வையிடுவதற்கு சுமார்12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் பேர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

26 கல்வி நிறுவனங்களும், 22 தொழில் பயிற்சி நிறுவனங்களும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் பயிற்சியுடன் தொடர்புடைய 16 நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்குபெறவுள்ளதாகவும்

கண்காட்சிக்கு புறம்பாக மாணவர்களுக்கும், ஏனையவர்களுக்கும் கருத்தரங்குகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்பாரிய நிகழ்வை திறன்பட செய்து கொள்வதற்கு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையுடன் உடன்படிக்கை ஒன்றினையும் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். 

நிகழ்வில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன், சாய்ந்தமருது கோட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.ரஹ்மான், நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் சிரந்த, உள்ளிட்டோர் பங்குகொண்டிருந்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -