அட்டாளைச்சேனை கமநல சேவை கேந்திர நிலையத்தில் இலஞ்சம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் கொழும்பில் இருந்து இன்று வருகை தந்திருந்த இலஞ்ச உழல் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டில் அமைந்திருக்கும் கமநல சேவை கேந்திர நிலையத்திற்குச் சென்று இரண்டு பேரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.
ஆனால் குறிப்பிட்ட இருவரில் இலஞ்சம் கேட்டவர், பெற்றுக்கொண்டவர் , என இருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பணத்தினைப்பெற்றுக்கொண்டவர் யார்.? எதற்காகப் பணம் இலஞ்சமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டது என்ற தகவல் விசாரணைகளின் பின்னரே தெரிவிக்கப்படும்.