இறந்துவிட்டதாக கருதப்பட்டு கொங்கிறீட்டாலான கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்ட இளவயது கர்ப்பிணிப் பெண் ஒருவர், ஒரு நாள் கழித்து தனது சவப்பெட்டியிலிருந்து உதவி கோரி கூச்சலிட்ட சம்பவம் ஹொண்டூரஸில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கல்லறையை உடை த்து நேஸி பெரஸ் (16) என்ற மேற்படி யுவதியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது சடலம் ஏற்கனவே புதைக்கப்பட்ட அதே கல்லறையில் மீண்டும் புதைக்கப்பட்டது.
நேஸி பெரஸ் கல்லறைக்குள் தனது சவப்பெட்டியின் கண்ணாடியாலான மூடியை உடைத்துத் திறக்க முயற்சித்தமை காரணமாக அவரது கைளில் சிராய்ப்புக் காயங் கள் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேற்கு ஹொண்டூரஸிலுள்ள லா என்ரடா பிராந்தியத்தைச் சேர்ந்த 3 மாத கர்ப்பிணியான நேஸி பெரஸ், சம்பவ தினம் இரவு தனது வீட்டிற்கு வெளியில் இருந்த மலசலகூடத்துக்கு சென்ற போது மயக்கமடைந்து விழுந்துள்ளார்.
அந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் ஏற்பட்ட சத்தங்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்தே அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் வாயிலிருந்து நுரை வெளித் தள்ளியதால் அவரது பெற்றோர் அவரை தீய ஆவி பீடித்துள்ளதாக கருதி தமது மகளுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிய உள்ளூர் மதகுருவொருவரை வரவழைத்து ள்ளனர்.
இதனையடுத்து அந்த மதகுரு அவரைப் பீடித்துள்ள ஆவியை விரட்டுவதாக கூறி மதச் சடங்குகளை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் உடல் இயக்கங்கள் ஸ்தம்பிதமடைந்ததால் அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மறுநாள் தனது மனைவியின் கல்லறைக்கு விஜயம் செய்த அவரது கணவர், அந்தக் கல்லறைக் குள் இருந்து வெளிப்பட்ட தனது மனைவியின் கூச்சல் சத்தத்தை செவிமடுத்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்தே அந்தக் கல்லறையை தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிகின்றன.