பொறுத்தார் அரசாள்வார்..! என்பதற்கு இவர்கள் உதாரணம் -யார் அவர்கள் என்ன விடையம் உள்ளே..

ஆரெம்-

பொறுத்தார் அரசாழ்வார், பொங்கினார் காடேர்வார் என்ற முன்னோர் சொல்லுக்கேற்ப இன்று அம்பாரை மாவட்டத்தில் இரண்டு பேருக்கு இது நடந்துள்ளமை ஞாபகத்துக்கு வருகிறது.

கடந்த மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத்தழுவிய பொத்துவிலைச் சேர்ந்த எஸ்.எஸ்.பி.மஜீட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சென்று மீண்டும் மயில் கட்சிக்குத் தாவி தேர்தல் ஒன்றிலும் களமிறங்கி தோல்வியைத் தழுவியமை நாம் அறிந்த விடையம்.
ஆனால் இன்று கட்சியில் சிலருடைய மாற்றங்கள் காரணமாக மாகாண சபைக்குச் செல்லும் சந்தர்ப்பம் வந்திருந்தும் அங்கு செல்ல முடியாத துர்பாக்கிய நிலைமையில் பொத்துவில் SSP மஜீத் இருந்து கொண்டிருப்பது வேதனையான விடையம்தான்.

அது போன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பாராளுமன்றத்திற்குத் தெரிவானதன் காரணமாக அடுத்த சுகாதார அமைச்சராகும் சந்தர்ப்பம் அதிகூடுதலாக இருந்த குழுக்களின் தலைவராக இருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆனால் அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பக்கம் தாவியதன் காரணமாக அவருக்கான அமைச்சும் தடுக்கப்பட்டு, மாகாண சபை உறுப்பினர் பதவியும் பறிபோகும் நிலை உருவாகியுள்ளமை இந்த இடத்தில் சுற்றிக்காட்டப்பட வேண்டிய நிலமையாக இருக்கின்றமை உண்மையில் வேதனையான விடையம்தான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -