பொதியிலிருந்து மீட்கப்பட்ட பெண் தொடர்பாக திடுக்கிடும் சம்பவங்கள் அம்பலம்...!

புறக்­கோட்டை பெஸ்­டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிர­யாணப் பொதிக்குள் மறைத்து கைவி­டப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்ட பெண்ணின் சடலம் யாழ்.வட்­டுக்­கோட்­டையைச் சேர்ந்த 34 வய­து­டைய ரங்கன் கார்த்­தி­கா­வி­னு­டை­யது என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.

ஊட­கங்­களில் வெளி­யான புகைப்படங்­களைப் பார்த்த குறித்த பெண் தங்­கி­யி­ருந்­த­தாக கூறப்­படும் செட்­டியார் தெருவில் உள்ள தனியார் தங்­கு­மி­ட­மொன்றில் உள்ள நபர் ஒருவர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய தக­வல்­களின் அடிப்­ப­டை­யி­லேயே அவர் இவ்­வாறு அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

சுமார் ஒன்­பது நாட்கள் அவர் பிறி­தொரு ஆட­வ­ருடன் அந்த தங்கும் விடு­தியில் ஒன்­றாக இருந்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக அவர் மேலும் குறிப்­பிட்டார்.

சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண் கடந்த 3 வரு­டங்­க­ளாக கொழும்­பி­லேயே வசித்து வந்­துள்­ள­தா­கவும் இறு­தி­யாக அவர் ஒன்­பது நாட்­க­ளுக்கு முன்னர் கொழும்பு செட்­டியார் தெருவில் உள்ள குறித்த தனியார் தங்கும் விடு­திக்கு பிறி­தொரு ஆணுடன் வந்து தங்­கி­யி­ருந்­துள்­ள­தா­கவும், குறித்த நபரை தற்­போது பொலிஸார் தேடி வரு­வ­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

இந்த விடயம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பிர­தான பொறுப்பு கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்­டவின் நேரடி கட்­டுப்­பாட்டின் கீழ் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­விடம் (சீ.சீ.டி) ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

செட்­டியார் தெருவில் உள்ள குறித்த தங்கு­மி­டத்தில் வைத்தே கார்த்­திகா கொலை செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும் என சந்­தே­கிக்கும் பொலிஸார், 3 அடி நீளம், 2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உய­ர­மான கறுப்பு நிற பெட்­டி­யொன்றை சிர­மத்­துக்கு மத்­தியில் சந்­தேக நபர் சுமந்­து­கொன்டு விடு­தியில் இருந்து வெளி­யேறும் சீ.சீ.ரி.வி. காட்­சி­க­ளையும் கைப்­பற்­றி­யுள்­ளனர். மேல் மாடியில் இருந்து மிகவும் சிர­மத்­துக்கு மத்­தியில் அந்த பெட்­டியைக் குறித்த நபர் சுமந்து வரு­வ­துடன், பதி­வு­களை முடித்­து­க்­கொண்டு பெட்­டி­யுடன் வெளியே வந்து அதனை இழுத்­துக்­கொண்டு செல்லும் காட்சி அதில் பதி­வா­கி­யுள்­ளது.

இத­னை­விட அவர் அப்­பெட்­டி­யுடன் பெஸ்­டியன் மாவத்தை பஸ் நிலை­யத்­துக்கு சென்­ற­மைக்­கான ஆதா­ரங்­க­ளாக மேலும் சில சீ.சீ.ரி.வி. காட்சிப் பதி­வு­க­ளையும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலிஸார் சேக­ரித்­துள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தர்.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது;

சட­ல­மாக மீட்­கப்­பட்ட கார்த்­தி­காவின் கணவன் வெளி­நா­டொன்றில் வேலை செய்து வரு­கின்றார். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளி நாட்­டுக்கு சென்­றுள்ள அவர் இது­வரை நாடு திரும்­ப­வில்லை. கார்த்­தி­கா­வுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில் அவர் கார்த்­தி­காவின் தாயாரி டமே வளர்ந்து வரு­வ­தாக பொலிஸார் தெரி விக்­கின்­றனர்.

சட­லத்தை அடை­யாளம் காட்ட வட்­டுக்­கோட்­டையில் இருந்து கார்த்­தி­காவின் தாயார் நேற்று இரவு கொழும்பு நோக்கி வந்­துள்ள நிலையில் இன்று கார்த்­தி­காவின் சடலம் மீது பிரேத பரி­சோ­த­னைகள் இடம்­பெ­ற­வுள்­ளன.

கார்த்­திகா இறு­தி­யாக தங்­கி­யி­ருந்த செட்­டியார் தெரு தங்­கு­மி­டத்தில் இருந்த சீ.சீ.டீ.வி. கண்­கா­ணிப்பு கமரா பதி­வு­களும் விசா­ரணைக் குழு­வி­னரின் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் சந்­தேக நப­ரையும் பொலிஸார் அடை­யாளம் கண்­டுள்­ளனர். கார்த்­தி­கா­வுடன் கொழும்பில் இருந்த குறித்த நபர் தொடர்பில் கார்த்­தி­காவின் தாயா­ருக்கு தக­வல்கள் தெரிந்­தி­ருப்­ப­தாக கூறும் பொலிஸார் முறை­த­வ­றிய காதல் விவ­காரம் ஒன்­றூ­டாக இந்த கொலை இடம்­பெற்­றி­ருக்க வேண்டும் என சந்­தேகம் வெளி­யி­டு­கின்­றனர்.

இது வரை மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களில் ஒரு வாரத்­துக்கு முன்பு கார்த்­தி­காவே குறித்த தங்­கு­மி­டத்தில் அறை எடுத்து தங்­கி­யுள்­ள­துடன், பின்­ன­ரேயே கர்த்­தி­காவை சந்­திக்க வேண்டும் எனக் கூறிக்­கொண்டு குறித்த சந்­தேக நபர் அங்கு வந்­துள்­ள­துதும் இதன் போது அவி­ரு­வரும் ஒரே அரையில் தங்­கி­யுள்­ளதும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இதனை விட கடந்த 29 ஆம் திகதி புதன் கிழமை அதி­காலை 12.15 மணிக்கும் அதி­காலை 12.18 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் குறித்த நபர் குரித்த பெட்­டி­யுடன் தங்­கு­மி­டத்­தி­லி­ருந்து வெளி­யே­று­வது சீ.சீ.ரீ.வி.கண்­கா­ணிப்பு கம­ராவில் பதி­வா­கி­யுள்­ளது. இந் நிலையில் குறித்த பெண் கொலை செய்­யப்­பட்­டி­ருப்பின் அது 28 ஆம் திகதி பின்­னி­ரவில் இடம்­பெற்­றி­ருக்க வேண்டும் என சந்­தே­கிக்கும் பொலிஸார் பயணப் பெட்­டி­யா­னது ஆள் நட­மாட்டம் இல்­லாத அதி­காலை வேளையி பஸ் தரிப்­பி­டத்தில் கைவி­டப்­பட்­டி­ருக்க வேண்டும் என சந்­தே­கிக்­கின்­றனர்.

சம்­பவம் தொடர்­பாக விரி­வான விசா­ரணை ஒன்று இடம்­பெற்று வரும் நிலையில் சந்­தேக நபரைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழு­வொன்று கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
கார்த்­தி­காவை கொலை செய்த நபர் அவரை பெட்­டியில் இட்டு தூரப் பிர­தேச பஸ் வண்­டி­யொன்றில் கைவிட்டுச் செல்லும் நோக்­கோடு பெஸ்­டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலை­யத்­துக்கு வந்­தி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

அத்­துடன் அதிக நிறை கார­ண­மாக 15 ஆம் இலக்க அனு­ரா­த­புரம் - கொழும்பு பஸ் தரிப்பு இடத்­துக்கு அருகே அந்த பெட்­டியின் சக்­கரம் ஒன்று உடைந்­துள்­ளதால் அதனை தொடர்ந்தும் தூக்கிச் செல்­வதில் எற்­பட்ட சிர­மத்­தை­ய­டுத்து அந்த பஸ் தரிப்பு நிலை­யத்­தி­லேயே சந்­தேக நபர் பெட்­டியை விட்டுச் சென்­றி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். பெரும்­பாலும் யாழ். நோக்கி பய­ணிக்கும் பஸ் வண்­டி­யொன்றில் அப்­பெட்­டியை கைவிட்டு செல்­வது சந்­தேக நபரின் நோக்­க­மாக இருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

புறக்­கோட்டை, பெஸ்­டியன் மாவத்­தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பு நிலை­யத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த ­தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பு நிலை­யத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த பய­ணிகள் பொதி­யொன்­றுக்குள் இருந்து அரை நிர்­வா­ண­மான நிலையில் கார்த்திகாவின் சடலம் நேற்று முன் தினம் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டி­ருந்­தது. புறக்­கோட்டை பஸ் தரிப்பு நிலை­யத்தின் நடை­பாதை வியா­பாரி ஒருவர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய தக­வலின் பிர­காரம்கைவி­டப்­பட்­டி­ருந்த குறித்த கறுப்பு நிறத்­தி­னா­லான 3 அடி நீளம் 2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உயரம் கொண்ட பெரிய பொதி­யினை திறந்து பார்த்த பொலிஸார் இந்த சட­லத்தை மீட்­டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -