எனக்கு எதிரான விசாரணைகளுக்கு முகம்கொடுப்பதற்காகவே நான் வந்தேன்- பஸில்

ட்டத்தை மதிக்கும் குடிமகன் என்றவகையில் எனக்கு எதிரான விசாரணைகளுக்கு முகம்கொடுப்பதற்காகவே நான், இலங்கைக்கு வந்தேன் என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கட்டுநாயக்கவில் குழுமியிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களின் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரமுகர்கள் வெளியேறும் வாயிலின் ஊடாக வெளியேறிய அவர், அதன் மூலையில் இருந்த அதிவிசேட பிரமுகர்கள் வெளியேறும் (வி.ஐ.பி), வாயிலின் அடியில் நுழைந்து வெளியேவந்தார்.

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் காரணமாக பிரமுகர்கள் வெளியேறும் மூலையில் இருந்த அதிவிசேட பிரமுகர்கள் வெளியேறும் வாயில் மூடப்பட்டிருந்தது.

விமான நிலைய வளாகத்தில் இருந்த மஞ்சள் பூக்கள் பூக்கும் மரத்தின் கிளையில் ஏறியிருந்த போது அவருக்கு பிரித் நூல் கட்டப்பட்டது. 

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைச்சேர்ந்த பிரபல்யமானவர் என்றபோதிலும் அவரை வரவேற்பதற்கு கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த எவரும் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -