அபு அலா –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அதி உயர்பீட உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் நாளை (24) காலை கட்டார் பயணமானார்.
இலங்கையிலிருந்து கட்டார் நாட்டுக்கு வேலை வாய்ப்புக்களுக்காக சென்றுள்ள இலங்கையர்களை நாளை (25) காலை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் அங்கு வேலை செய்யும் இலங்கையர்களின் பிரச்சினை தொடர்பிலும், அவர்கள் எதிர்நோக்கிவரும் சிக்கல் நிலை தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
மேலும், கட்டாரில் தொழில் புரியும் இலங்கையர்கள் தங்களின் சிக்கல் நிலைமை தொடர்பாகவும், பிரச்சினைகளை தெரிவிக்க +974 6627 3815 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது நேரடியாகவும் சந்திக்க முடியும் என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீர் தெரிவித்தார்.