நாளை முதல் பாடசாலைக்கு செல்ல வேண்டாம் -பொத்துவிலில் துண்டுப்பிரசுரம்

செய்தியாளர் எம்.ஏ. தாஜகான்-

பொத்துவில் பாடசாலையின் மாணவர்களை நாளை முதல் பாடசாலைக்கு செல்ல வேண்டாம் என இன்று பொத்துவிலை நேசிக்கும் பெற்றோர்கள் எனும் அமைப்பில் துண்டுப்பிரசுரம் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் பதிலீடுகள் இன்றி பொத்துவில் கோட்டத்தில் 32 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்.  அவர்களுக்கான பதிலீடுகளை நியமிப்பதில் சிக்கல் நிலவி வருவதால் தொடருகின்ற ஆசிரியர் பற்றாக்குறையினை இதுவரை அக்கரைப்பற்று வலயம் நிவர்த்தி செய்யவில்லை. 

அக்கரைப்பற்று வலயத்தை நம்பி பிரயோசனமில்லை. என்ற தொனியில் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து நாளை முதல் மாணவர்கள் பகிஸ்கரிப்பை மேற்கொள்ள திட்டம் தீட்டியுள்ளனர்.

கல்விப் பணிப்பாளர்கள் நாளை முதல் மாணவர்கள் பகிஸ்கரிப்பை ஏற்படுத்துவதை விடுத்து பொத்துவில் கோட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வார்களா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -