Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- news@importmirror.com Admin-message


Headlines
Loading...
Admin-message

.பொத்துவில் பிரதேச பாடசாலைகளுக்கு அப்பிரதேசத்தவரை ஆசிரியராக நியமிக்க நடவடிக்கை!

அப்துல் அஸீஸ் -
லையக பிரதேசத்துக்கான விசேட ஆசிரியர் நியமன வேலைத் திட்டத்தை போன்று பொத்துவில் பிரதேசத்து பாடசாலைகளுக்கும் அப்பிரதேசத்தவரை உள்ளடக்கியதான ஆசிரியர் நியமனத்தை பெற்றுக் கொடுக்க எமது கட்சி அமைச்சரவை ஊடாக நடவடிக்கை மேற் கொள்ளும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொத்துவில் பிரதேசத்துக்கான மத்திய சபை செயற் குழு அங்குரார்ப்பன நிகழ்வு பொத்துவில்-01ஆம் பிரிவில் இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்;

பொத்துவில் பிரதேசத்துக்கான பாடசாலைகளில் நியமிக்கப்படும் வெளிப் பிரதேச ஆசிரியர்கள் தொடர்ந்து கடமையாற்றாது இடமாற்றங்களை பெற்றுக் கொண்டு தங்களுக்கு அருகிலுள்ள பிரதேசதங்களுக்கு சென்று விடும் நடவடிக்கை தொடர்சியாக இடம் பெருகின்றமையை தங்களின் வேண்டு கோள் ஊடாக தான் அறிவேன் இத் தேவைப்பாட்டை தீர்க்கும் முகமாகவே இம் மாற்று வேலைத் திட்டத்தினை எமது கட்சி மேட்கொள்ளுள்ளவுள்ளது எனக் குறிப்பிட்டார்.

அதிபர் ஏ.எம்.ஹகீம் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ் ஹமீட், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சதோச நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சீ.எம்.முபீத், அம்பாறை மாவட்ட கட்சி இணைப்பாளர் ஏ.எம்.லத்தீப், இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சீ.எம்.ஹலீம், மருதமுனை நாவிதன் வெளி பிரதேச இணைப்பாளர் சித்தீக் நதீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொத்துவில் பிரதேசத்துக்கான மத்திய சபை செயற் குழு அங்குரார்ப்பனமும் இடம் பெற்றது. தலைவர்- ஆசிரியர் எ.எஸ்.எம்.சலீம்,செயலாளர்- எம்.எ.எம்.ரியாத், அமைப்பாளர் - எம்.ஐ.எம்.சஹீட், கட்சி இணைப்பாளர்-எ.எ.இர்ஷாத் ஆகியோர் தெரிவு செயப்பட்டனர்.





முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.