தனது 14 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பிணியாக்கிய 43 வயதான தந்தை ஒருவர் வாகரை பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள நடுக்குடியிருப்புப் பகுதியில் பெற்றோருடன் வசிக்கும் 14 வயதான மூத்த மகளே அவரின் தந்தையால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமடைந்துள்ளார்.
திடீர் சுகயீனம் காரணமாக மேற்படி சிறுமி வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அப்போது மேற் கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போதே சிறுமி கர்ப்பமடைந்துள்ள விடயம் வைத்தியர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சிறுமி தெரிவித்த தகவல் மூலம் சிறுமியின் வயிற்றில் வளரும் இரண்டு மாத சிசுவுக்கு அவளது தந்தையே காரணம் என்பது தெரிய வந்திருக்கின்றது.
அப்போது மேற் கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போதே சிறுமி கர்ப்பமடைந்துள்ள விடயம் வைத்தியர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சிறுமி தெரிவித்த தகவல் மூலம் சிறுமியின் வயிற்றில் வளரும் இரண்டு மாத சிசுவுக்கு அவளது தந்தையே காரணம் என்பது தெரிய வந்திருக்கின்றது.
சிறுமிக்கு மேலும் 4 சகோதரர்கள் உள்ளனரென்றும் சிறுமியின் தாய் மன நிலை பாதிக்கப்பட்ட ஒருவர் என்றும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை நிருவாகம் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சொந்த மகளையே கர்ப்பமாக்கிய தகப்பனை வாகரை பொலிசார் கைது செய்துள்ளனர் .