சொந்த மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை கைது - மட்டக்களப்பு- வாகரையில் சம்பவம்!

னது 14 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பிணியாக்கிய 43 வயதான தந்தை ஒருவர் வாகரை பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள நடுக்குடியிருப்புப் பகுதியில் பெற்றோருடன் வசிக்கும் 14 வயதான மூத்த மகளே அவரின் தந்தையால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமடைந்துள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாக மேற்படி சிறுமி வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அப்போது மேற் கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போதே சிறுமி கர்ப்பமடைந்துள்ள விடயம் வைத்தியர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சிறுமி தெரிவித்த தகவல் மூலம் சிறுமியின் வயிற்றில் வளரும் இரண்டு மாத சிசுவுக்கு அவளது தந்தையே காரணம் என்பது தெரிய வந்திருக்கின்றது.

சிறுமிக்கு மேலும் 4 சகோதரர்கள் உள்ளனரென்றும் சிறுமியின் தாய் மன நிலை பாதிக்கப்பட்ட ஒருவர் என்றும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை நிருவாகம் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சொந்த மகளையே கர்ப்பமாக்கிய தகப்பனை வாகரை பொலிசார் கைது செய்துள்ளனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -