வாகனங்களின் புகை பரிசோதிக்கப்பட வேண்டிய கட்டாய கடப்பாடு கைத்தொழில்மய நாடுகளுக்கு உண்டு. எமது நாடு ஒரு விவசாய நாடு இங்கு வளிமண்டல மாசு தொடர்பான முறைப்பாடுகள் பெரிய அளவில் இல்லை. கொழும்பு, கண்டி போன்ற மா நகரங்களில் புகைப்பரிசோதனை செய்யப்படுவதில் ஓரளவு நியாயம் இருக்கலாம்.
மாறாக தாவரப்போர்வையால் சூழப்பட்டுள்ள கிராமப்பகுதிகளிலும் வாகனப்புகை பரிசோதனை செய்யப்படுவதில் என்ன?... நியாயம் இருக்கிறது.
பெற்றோல் வாகனங்களில் புகை குறைவானது,ஆனால் டீசல் வாகனங்களில் புகை அதிகமானது.பஸ்,லொறி,கெண்டர்,பாரவூர்தி போன்றன அதிக புகைவிடுபவை.
நடுத்தர வருமானமுள்ள மக்களின் மோட்டார் சைக்கிள்களுக்கும் புகை பரிசோதனைக்காக செலவு செய்ய வேண்டி உள்ளது. இது இவர்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது.மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி அதிகம் சிந்திக்கும் புத்திஜீவிகளைக் கொண்ட புதிய அரசு இவ்விடயத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டும்.
வயிறுவளர்க்கும் சிலரின் தேவைக்காக இப்புகைப்பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டதா?... என்ற கேள்வி மக்கள் மனதில் உள்ளது.