அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை ஏற்றது சவூதி அரசு!

கர அபிவிருத்தி, நீர் விநியோகம் போன்றவற்றிற்கு சவூதி அபிவிருத்தி நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அதன் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

மறைந்த சவூதி மன்னன் அப்பதுல்லாஹ்பின் அப்துல் அஸீஸின் ஜனாஸா நல்லடக்கத்தை அடுத்து ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் விஷேட பிரதிநிதியாக அங்கு சென்ற தூதுக் குழுவிற்கு தலைமை தாங்கிய நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் புதிய மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் அரச குடும்பத்தினரை சந்தித்து ஜனாதிபதியினதும், நாட்டு மக்களினதும் அனுதாபத்தை தெரிவித்த பின்னர், சவூதி அபிவிருத்தி நிதியம், இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் சந்திக்கும் வாய்ப்பு அமைச்சர் ஹக்கீமுக்கு கிடைத்தது. 

சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உயர் அதிகாரி பொறியியலாளர் சதூகி, அமைச்சர் ஹக்கீம் தங்கியிருந்த ரியாத் நகரிலுள்ள அரச விருந்தினர் மாளிகைக்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார். 

அப்பொழுது இடம்பெற்ற உரையாடலில் சவூதிக்கான இலங்கை தூதுவர் ஹுசைன் முஹம்மதும் பங்குபற்றியுள்ளார். அப்பொழுது இலங்கையில் நகர அபிவிருத்தி, நீர் விநியோகம் போன்றவற்றிற்கு உதவி வழங்குவது தொடர்பில் அமைச்சர் விடுத்த வேண்டு கோளையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

பிரஸ்தாப சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதித் தலைவர் முஹம்மத் பஸ்ஸான் உடனும் அமைச்சர் ஹக்கீம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -