மக்கள் முன் கொடுக்கப்பட்ட சைக்கிள் வீட்டில் வைத்து பறிமுதல் -அட்டாளைச்சேனையில் கொடூரம்

அவதானி-

நாட்டில் பல பாகங்களிலும் வாழ்வாதாரம், உபகரணம் வழங்கல், பணம் வழங்கள், நகை வழங்கள், சைக்கிள் வழங்கள், சட்டி வழங்கள் என்று பல நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஆனால் இதில் என்ன அதிசயம் என்றால் இம்போட்மிரர் செய்திப்பிரிவுக்கு இன்று மாலை 5 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அழைத்தவர் அழுதவாறு (கூறிய விடயங்கள் ஒலிப்பதிவும் செய்யப்பட்டது) எனக்கு நேற்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கிய சைக்கிளை வீட்டுக்கு வந்து ஒரு நபர் பறித்துக்கொண்டு சென்று விட்டார். பெயர் பிழையாக போடப்பட்டதால் சைக்கிள் வேறு நபருக்கு வழங்கப்படவேண்டும் அதனால் திருப்பித் தரவேண்டும் என்று சண்டித்தனம் பேசி சைக்கலை பறித்துச்சென்றதாகத் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க இன்னுமொரு நபருக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அவதானி தெரிவித்திருக்கிறார். குறிப்பிட்ட சம்பவம் யாரால் யாருக்கு நடந்தது என்னும் விபரம் இம்போட்மிரர் இணையத்தளத்தில் விரிவாக ஒலிப்பதிவுடன் நாம் நாளை பதிவிட இருக்கிறோம். எனவே குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட சைக்கலை மீண்டும் அந்த நபரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பெயர் பிழை என்றால் சைக்கல் மீண்டும் பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதனையும் அவதானி இம்போட்மிரர் மூலம் தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறார். எனவே இது சம்மந்தமான செய்தி மீண்டும் விரிவாக தொடர்ந்தும் பார்வையிடலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -