அமைச்சர் அதாவுல்லாவின் வலக்கை, இடக்கைகள் ஐ.தே.கட்சியுடன் இணைவு!

 மைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் முன்னாள் இணைப்புச் செயலாளரும், கடந்த அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில் தேசிய காங்கிரசில் போட்டியிட்டவருமான எம்.ஐ.ஏ.ஆர்.புஹாரி மற்றும் அவரின் தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்கள் இன்று 14ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

இந் நிகழ்வு முன்னாள் இணைப்புச் செயலாளர் புஹாரி அவர்களின் அக்கரைப்பற்று இல்லத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான திரு.தயாகமகே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி.மஜீட்ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் அம்பாரை வீதியில் உள்ள வை.எம்.சீ.ஏ. மண்டபத்திலும் மற்றுமொரு குழுவினரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கவுள்ளார்கள்.
#உதயம்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -