மஹிந்தவை நபி பெருமானாருக்கு ஒப்பிடும் அஸ்வர்!

எம்.ஏ.தாஜகான்-

யேசுநாதரைக் காட்டிக் கொடுக்க யூதாஸ் இரவுவரை அவருடன் இருந்து சாப்பிட்டு விட்டு, 30வெள்ளிக் காசுக்காக அவரைக் காட்டிக் கொடுத்தான். அதேபோன்று, நபி பெருமானாரைக் காட்டிக் கொடுக்க முயற்சித்தான் அபு ஜஹ்ல். இவர்கள் எல்லாம் இந்த மதத்தலைவர்களைக் காட்டிக் கொடுத்த போதும், அவர்கள் சார்ந்த மார்க்கம் கோடான கோடி மக்களுடன் வளர்ந்தது.

அதேபோன்று, மஹிந்த ராஜபக்ஷவுடன் முதல்நாள் இரவு இருந்து உணவருந்திய மைத்திரிபால சிறிசேன அடுத்த நாள் அவருக்கு துரோகத்தனம் செய்தார். காட்டிக் கொடுத்தவர்கள் அழிந்தமையே வரலாறு. வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, ஜனாதிபதிக்கெதிராக சதி செய்தவர்கள் தொடர்பான விபரம் அனைத்தும் அம்பலத்துக்கு வரும் என அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.

இது தேசிய ஊடகம் ஒன்று தந்த செய்தி. இங்கு யூதாஸ் மற்றும் அபு ஜஹ்ல் ஆகியோருக்கு மைத்திரிபால சிறிசேனவை ஒப்பிட்டுள்ள அஸ்வர் எம்.பி., இயேசு நாதரையும், நபி பெருமானாரையும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒப்பிட்டுள்ளார். 

அதாவது, கிறிஸ்த்தவர்கள் கடவுளாக வணங்கிவரும் இயேசுநாதரையும், முஸ்லிம் களின் இறைதூதரான நபி பெருமானாரையும் உதாரணங்களாக்கியதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவை கடவுளாகவும், இறைதூதராகவும் சித்தரித்துள்ளார். இது உங்கள் சிந்தனைக்கு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :