கட்டாரில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் கர்வா பஸ் வண்டிகள் தீக்கிரை

ட்டாரில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் கர்வா பஸ் வண்டிகள்  தீயில் கருகி நாசமாகியுள்ளதாக தோஹா நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் கட்டார் அபூ ஹமூரில் அமைந்துள்ள கர்வா கம்பவுண்டில் மறுதினம் போக்குவரத்துக்குத் தயார்படுத்தப்பட்டு நிறுத்தி வைக்கப்படிருந்த நிலையில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 24 க்கு மேற்பட்ட பஸ் வண்டிகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், குறித்த பஸ் வண்டிகளில் அதிகமானவை பாடசாலை சேவைகளில் ஈடுபடுபவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த தீ விபத்து பிற்பகல் 8.30 இடம்பெற்றுள்ளதாகவும், சுமார் 11 மணியளவில் தீ பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணங்கள் குறித்து இது வரை தெரியவில்லையென்பதுடன், திட்டமிடப்பட்டதா? அல்லது தற்செயலாக இடம்பெற்றதா? என்பது குறித்து பொலிசாரும், புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி: கல்குடநேசன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :