கடந்த மே மாதம் 5 ஆம் திகதி துபாயிலிருந்து அனுப்பட்ட மூன்று பொதிகளை உரிமையாளர்கள் வந்து பெற்றுக் கொள்ளாமை தொடர்பில்
ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து குறித்த பொதிகளை திறந்து பார்க்கும் போது அவற்றுக்குள் பத்திரிகைகள் மற்றும் கொங்ரீட் கற்கள் இருந்ததாக கோட்டை மத்திய தபால் பறிமாற்றுப் பிரிவின் வெளிநாட்டு தபால் அதிகாரி ஜே.எச். எம். சமரசிங்கவால் கடந்த மாதம் 8 ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்படு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கோட்டை பொலிஸார் மேற் கொண்ட தீவிர விசாரணைகளையடுத்து மத்திய தபால் பரிமாற்று பிரிவில் பணி புரிந்த சிலரால் இந்தப் பொதிகளிலிருந்த பொருட்களை மாற்றி விட்டு வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் குறித்த தபாலக பொறுப்பதிகாரி, பொதிகள் பிரிவின் பொறுப்பதிகாரி, அலுவலக உதவியாளர், ஊழியர் ஒருவரும் மேலும் நான்கு பேரும் பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதுடன் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து மாற்றப்பட்ட பொதிகளுக்குள்ளிருந்த 173 கையடக்க தொலைபேசிகள், நான்கு டெப்களும் பொலிஸாரல் புறக்கோட்டையிலுள்ள வர்தக நிலையம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
இந்த மோசடியை செய்வதற்காக மத்திய தபால் பரிமாற்றுப் பிரிவின் பணிபுரிந்த சந்தேகநபர்களான அதிகாரிகளால் ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா பணம் பெற்றுக் கொண்டே இவர்கள் குறித்த பொதியை மாற்றியுள்ளதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அழித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கோட்டை நீதிவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட இருந்தனர்.
இது தொடரபில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.metronews
0 comments :
Post a Comment