அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள வெளிநாட்டு பெட்டிகள் வரும் கார்கோவில் நடப்பது என்ன











கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி ஒரு சிறந்த இடத்தில் அமைந்து சிறந்த சேவை செய்துவரும் ஓர் இடம்தான் சிலோன் சிப்பிங் கார்கோ.

இது அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ளது இங்கே களவுகள் நடப்பதாக சிலர் சமூக வலயத் தளங்களில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது சம்மந்தமாக இம்போட்மிரர் இணையத்தள செய்தியாளர்கள் அங்கு சென்று நிலமைகளை நேரடியாக கண்டறிந்து வந்துள்ளனர்.

அங்கு நடப்பது என்ன என்பதனை முதலில் பொருட்களை அனுப்பும் நண்பர்கள் அறிந்து கொள்ளவேண்டும். இது ஒரு வெறும் கார்கோ அல்ல இங்கு வரும் பொருட்கள் மிகவும் தரமான முறையில் சுங்கத்துறையினரின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளன என்பதும், சுங்கப்பிரிவினர்  இல்லாமல் பொருட்களோ, பெட்டியோ,  எதுவாக இருந்தாலும் வெளியில் எடுக்கவும் முடியாது, தொடவும் முடியாது என்பது நேரடியாக அறிந்த விடயம்.

அதுமாத்திரமல்லாமல் இங்கு வரும் பொருட்கள் கொழும்பில் இருந்து சுங்கத் துறையினரின் நேரடிக் கண்காணிப்பில்தான் அட்டாளைச்சேனைக்கு கொண்டுவரப்பட்டு அதர்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அறையில் இறக்கி இரும்பிலான சிவில் பன்னப்படுகிறது.

குறிப்பிட்ட பொருட்களுக்குரியவர்களுக்கான தகவல் சென்றதும் அவர்கள் வந்து அவர்களுக்கான சகல பொருட்களும் அவர்கள் முன்னால்வைத்து உடைத்து பரிசீலனை செய்து அவர்களிடம் ஒப்படைக்கப்படும் வரை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது.

ஆனால் பெட்டிகள், பொருட்கள் வெளிநாட்டில் இருந்து அல்லது கொழும்பில் இருந்து வாகனத்தில் ஏற்றி வரும்போது உடைதல் பொருட்கள் சேதமாதல், குறைதல் அப்படி ஏதும் நடந்திருந்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட சுங்க அதிகாரிகளுக்கு அறிவித்தால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதனைத் தவிர வேறு எந்த அசம்பாவிதங்களும் அங்கு நடைபெற ஒரு சந்தர்ப்பமும் இல்லை அது சம்மந்தமாக குறைகள் நடந்துள்ளன என்று இதுவரை எந்த முறைப்பாடுகளும் எங்கும் பொலிசிலோ அல்லது சுங்கத்துறையினரிடமோ வரவில்லை எனவே இது இவ்வாறிருக்க முகநூல் பக்கம் சிலர் விசமத்தனமாக பொய்யான தகவல்கள் மோசமாக வழங்குவது வன்மையாக கண்டிக்க வேண்டிய விடையம்.

வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் நீங்கள் அனுப்பும் பொருட்களை உங்களுக்கு உங்கள் இல்லத்துக்கு இலேசான முறையில் பிரயானச்சிலவு, காலச்சிலவுகள் இல்லாமல் மிகவும் பிரயோசனமான முறையில் எடுத்துச்செல்ல சிறப்பான முறையில் வளி செய்துள்ளார்கள்  சிலோன் சிப்பிங்க் நிறுவனத்தினர்.

அதுமாத்திரமில்லாமல் அங்கு முகாமையாளராக இருப்பவர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர் அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர் சந்தேகமான கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதிலளிக்கக்கூடியவர் எனவே வெளிநாடுகளில் இருந்து உங்கள் பொருட்களை கிழக்கின் எப்பாகத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றாலும் அட்டாளைச்சேனை சிலோன்சிப்பிங்க் கார்கோவுக்கு உங்கள் பொருட்களை அனுப்பலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :