கடந்த ஞாயிற்றுக்கிழமை வெயில் உச்சம் கொடுப்பதற்குமுன்னர் ராவுத்தர் ஆதம்பாவா தனது விவசாய நிலத்தைப் பார்ப்பதற்காக தனதுசைக்கிளில் பயணத்தைத் தொடர்ந்தார்.
அநுராதபுரம, முஸ்லிம் கட்டுக்கலியாவயிலுள்ள தனது வீட்டிலிருந்து அசரிக்கமையை அண்மித்த பிரதேசத்தில் அமைந்துள்ள விவசாய நிலத்தை நோக்கியதாகவே அவரது பயணம் தொடர்ந்தது. பெரியளவில் மனித சஞ்சாரம் அற்ற வனாந்தரம்நிறைந்த அந்த ஒற்றையடிப் பாதையிலான அவரது பயணம் அன்று வழமைக்கு மாறானகாட்சியை முன்னிறுத்தியது.
ஒற்றையடிப் பாதையில் பாதணிச் சோடியொன்றும் இரத்தக் கறையும் இருந்தது. அதனைக் கண்டு சலனப்பட்ட ராவுத்தர் ஆதம்பாவா சைக்கிளிலிருந்து இறங்கி சற்று தூரம் கால் நடையாகத் தொடர்ந்தார். கால்நடைப் பயணத்தின் குறுகிய நேரத்தில் அவர் கண்ட காட்சிஅவரை நிலைகுலைய வைத்தது.
அங்கு நெருப்பு கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.தன்னை சற்றுசுதாகரித்துக்கொண்டு அவதானித்தபோது அந்த தீச்சுவாலையில் நபர் ஒருவரின் தலைக்கவசம்(ஹெல்மட்) அணிந்த தலை எரிந்துகொண்டிருப்பதுகண்களுக்குப்புலப்பட்டது.அங்கு ஏதோ ஓர் அசம்பாவிதம் நடைபெற்றிருப்பதை உணர்ந்த அவர் உடனடியாக அங்கிருந்து விரைந்துதனது வீடு நோக்கிப் புறப்பட்டார்.
பின்னர் பிரதேசத்திலுள்ள கிராம சேவகருக்கு தகவல்வழங்கினார்.தொடர்ந்து கிராம சேவகரும் பிரதேச வாசிகள் சிலரும் குறித்த இடத்தை மு.ப 10.45 மணியளவில் அடைந்து அநுராதபுரம் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர். அங்கு மோட்டார் சைக்கிளோடு நபர் ஒருவர் அடையாளம் தெரியா வண்ணம் தீயில் கருகியிருந்தார்.
சற்று நேரத்தில் பிரதேசவாசிகள் குறித்தஇடத்தை மொய்த்து விட்டனர். கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டவர் யாரெனஅடையாளம் காண முடியாவிடினும் அவர் அணிந்திருப்பது சிவில்பாதுகாப்பு பிரிவினர் வெளிக்களப் பணியின்போது அணிந்திருக்கும்சீருடை என்பதும் அந்த மோட்டார் சைக்கில் ‘தபால் 90′ வகையைச்சேர்ந்ததென்பதும் தெரிய வந்தது.
அநுராதபுரம் மாவட்டத்தின் மேற்கு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளஅசரிக்கம கிராமத்தின் அலிவெட்டுனுவெவ பிரதேசத்தின் பிரதான பாதையிலிருந்து சுமாந் 200 மீற்றர் தொலைவிலேயே இந்த கொலைக் இடம்பெற்றிருந்தது. ஆகையினால் அசரிக்கம கிராமத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி ‘தபால் 90′ வகை மோட்டார் சைக்கிளில் சிவில்பாதுகாப்பு கடமைக்குச் செல்லும் ஒருவராகத்தான் இருக்கும் என சம்பவ இடத்தில் கூடிய பிரதேசவாசிகள் ஊகித்தனர்.
குறித்த அடையாளம்உள்ளவர்களை விசாரித்தனர். அதில் முஹமட் இஷாக்கும் ஒருவர். உடனடியாக இஷாகின் மனைவிக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தி கணவர் பற்றி விசாரித்தனர். தனது கணவர் “இன்று காலை தொழில் நிமித்தம் புறப்பட்டுள்ளதாகவும் தற்போது அவரின் தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்துஇஷாக்கின் மாமனார் (மனைவியின் தந்தை) சம்பவ இடத்திற்கு
வரவழைக்கப்பட்டார்.அங்கு வந்த மாமனார் அது தனது மருமகனான இஷாக்கின் சடலம்தான் என்பதை உறுதி செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவொன்று பல கோணங்களில் விசாரணைகளை முடுக்கிவிட்டது. குறித்த நபர் அன்று காலை தொழில் நிமித்தம் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
அத்தோடு ஒரு தொகைப் பணத்தையும் கொண்டுசென்றுள்ளார் .பிரதான பாதையிலிருந்து உள் நோக்கிச் செல்லும் ஒற்றையடிப் பாதைக்கு குறித்த நபரை வரவழைத்து தாக்கி கொலை செய்துள்ளனர். அந்த இடத்தில் ஏராளமான இரத்தக் கறைபடிந்துள்ளது. பின்னர் அங்கிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்கிளோடு சேர்த்து எரித்துள்ளதாக பொலிஸார் முதற்கட்ட விசாணைகளிலிருந்து தெரிவித்தனர்.
அத்துடன் சந்தேக நபர் ஒருவரையும் இனம் கண்டனர். அவர்அசரிக்கமைக்கு பக்கத்துக் கிராமமான கம்பிரிகஸ்வெவயைச் சேர்ந்தவர். உடனடியாக அந்த சந்தேகநபரைத் தேடி பொலிஸார் வலைவீசினர். எனினும் அவர் வீட்டில் இருக்கவில்லை. புத்தளம் சென்றுள்ளதாகதெரிய வர பொலிஸ் குழு சந்தேக நபரைத் தேடி புத்தளம் நோக்கி விரைந்தது.
மேலும் மற்றுமொரு பொலிஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து பொலிஸ்மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளைத் தொடங்கியது. மோப்ப நாயின் உதவியுடன் குறித்த சந்தேக நபரின் வீட்டிலிருந்து கூரிய ஆயுதம் ஒன்றும் இரத்தக் கறை படிந்த ஆடையும் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நீதிவான் வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அநுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதற்கிடையில் அன்று மாலை குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
எதற்காக கொலை நடைபெற்றிருக்கலாம்?
கொலைசெய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான 39 வயதான இஷாக்கும் (14 வயதில் ஆண் பிள்ளை ஒருவரும், 11,8,1 வயதில் மூன்று பெண் பிள்ளைகளும்) கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரும் நண்பர்கள். இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசுபவர்கள்.இஷாக்கிற்கு சந்தேக நபர் பணம் கொடுக்கவேண்டியிருந்தது.
சம்பவ தினத்திற்கு அண்மைய நாட்களில் இருவரும் சந்தித்துள்ளார்.அந்த சந்திப்பின் போது “தனக்கு பணம்தேவைப்படுவதாகவும் ஆகவே தனக்கு தர வேண்டிய பணத்தை தருமாறும்” இஷாக் கேட்டுள்ளார். அப்பணத்தை “ஞாயிற்றுக் கிழமை காலை தான் தருவதாகவும், அதனை தனது வீட்டுக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறும்” சந்தேக நபர்இஷாக்கிடம் கூறியுள்ளார்.
சம்பவ தினம் காலையில் இஷாக் தனது வயல் நிலத்திற்குச் சென்று நீர்பாய்ச்சிவிட்டு தனது கடமைக்காகப் புறப்பட்டுள்ளார். அத்துடன் தான்கொள்வனவு செய்துள்ள நான்கு சக்கர உழவு இயந்திரத்திற்கு தவணைக் கட்டணம் செலுத்துவதற்கென ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். (தவணைக் கட்டணமாக இரண்டு இலட்சம் ரூபா செலுத்த இருந்த நிலையில், இந்த ஒரு இலட்சத்துஅறுபதாயிரம் ரூபாவுடன் சந்தேக நபர் கொடுக்கும் நாற்பதாயிரம்ரூபாவும்)
எனவே இஷாக் தனது பயணத்தின் இடையில் சந்தேக நபரைச் சந்தித்தவேளையிலே இந்தக் கொலை நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
அடுத்த நாள்…
அடுத்த நாள்…
கடந்த திங்கட்கிழமை பிரேத பரிசோதனையின் பின்னர் ஜனாஸா முத்திரையிடப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.அன்று மாலை 4.30 மணியளவில அசரிக்கம மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. அதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரால் குறித்த பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டு அவரின் தகவலின்படி மரணித்தவரின் தொலைபேசி கண்டெடுக்கப்பட்டது.
அந்த தொலைபேசி எரிக்கப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டது. சந்தேகநபரை பிரதேசத்திற்கு பொலிஸார் அழைத்து வந்தவேளை பிரதேசத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் குறித்த கொலைக்கு வேறு பின்னணி உள்ளதா? தனிநபர் ஒருவர் இந்த கொலையைச் செய்தாரா? கொலையின் பின்னணியில் இன்னும் வேறு யாரும்உள்ளனரா? என பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
எவ்வாறாயினும் சம்பவம் நடைபெற்ற அசரிக்கம பிரதேசமானது போக்குவரத்து வசதிகள் குறைந்த பிரதேசமாகும். அத்துடன் அந்த வனப் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசமும் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. ஆதலால் அத்தியவசியத் தேவைகளுக்காகவே அப்பிரதேசத்தவர்கள் இரவு நேரப் பயணங்களை மேற்கொள்கின்றனர். இது இவ்வாறிருக்க பட்டப் பகலில் நடந்திருக்கும் குறித்த கொலைச் சம்பவத்தினால் பிரதேசவாசிகள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
நன்றி-விடிவெள்ளி/ம.நி
0 comments :
Post a Comment