அமைச்சர் ‘ஹக்கீமின் அதிரவைக்கும் கருத்து’ – சிங்கள ஊடகம்


புனித உம்ராவுக்குச் சென்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்வரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம், அங்கு உலக இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கை வாழும் முஸ்லீம்களுக்கு நடைபெறும் பிரச்சினைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘ஹக்கீமின் மற்றுமொரு குண்டு’ என்ற தலைப்பில் இன்றைய ஞாயிறு பத்திரிகையொன்றில் இச்செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் ஹக்கீமும் அவரது குழுவும் சவூதி அரேபியாவின் ஜித்தாவுக்குச் சென்று உலக இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டதாகவும், அங்கு அவர்கள் இலங்கை வாழும் முஸ்லீம்களுக்கு நடைபெறும் பிரச்சினைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளதாகவும் அப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேபோன்றுதான் ஏற்கனவே இலங்கையில் வாழும் முஸ்லீம்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது எனத் தெரிவித்து அறிக்கை ஒன்றை முஸ்லீம் காங்கிரஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரிடமும், நவநீதம் பிள்ளையிடமும் சமர்பித்ததாக அப் பத்திரிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :