சர்வமத அமைப்புக்களால் நன்மையில்லை. பௌத்த தர்மத்தை பாதுகாப்பதற்காக நாம் உண்மையான திட்டங்களை வகுத்து வருகின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருநாகல் நாரம்பல பிரதேச செயலாளர் பிரிவில் சாலியால வர்தனாராம விகாரையில் அண்மையில் இடம்பெற்ற பௌத்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேரர் இங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது;
இலங்கை என்ற சிங்களத் தீவில் 70வீதமாக நாம் வாழ்ந்த போதிலும் நாம் வாழும் தெற்காசிய வலயத்தை எடுத்துக் கொள்வோமானால் நாம் வெறும் மழைக்குமிழ் நீர் அளவிலேயே உள்ளோம்.
சிங்கள மொழி பேசும் இனத்தினருக்கு உலகிலுள்ள ஒரேயொரு நாடு இலங்கையாகும். எமக்கென வேறு நாடு இல்லை.
எனவே, இந்நாட்டை வளப்படுத்திய வரலாற்றுப் புகழ் மிக்க இனத்தை பாதுகாப்பதற்காக குரல் கொடுப்பதை இனவாதம் என்று அர்த்தப்படுத்தினால் அவ்வாறானவர்களை அங்கொடைக்கு அல்லது முல்லேரியாவுக்கு அனுப்பி வைத்து மூளையை பரிசோதிக்க வேண்டும். எமது திட்டங்களை வெளிநாட்டு பணம் பெற்று பிழைப்பு நடத்தும் சிவில் அமைப்புக்களே குழப்புகின்றன. உலகிலேயே இஸ்ரேலிலும் எமது நாட்டிலும் மட்டும்தான் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள்.
இஸ்ரேலில் யூதர்களும் இலங்கையில் சிங்களவர்களும் வாழ்கிறார்கள். தென்னந்தோப்புக்களில் இடைப் பயிர்களாக வாழை மரங்களும் கடுகுச் செடிகளும் செழிப்பாக வளர்ந்தாலும் அத்தோட்டங்களுக்கு தென்னந்தோப்புக்கள் என்றே கூறுவோம். அதைவிடுத்து வேறு பெயர் சொல்வதில்லை.
பௌத்தர்களை
உலகில் பௌத்தர்களை இழிவுபடுத்தி கேவலப்படுத்துவதற்கான திட்டங்களையும் இங்கு மதக்கலவரங்களை தூண்டி விடும் செயற்பாடுகளையும் நாடு பூராவும் இயங்கும் 400 க்கும் மேலான அடிப்படைவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.
தற்போது பௌத்தர்களுக்கு எதிரான செயற்பாடுகளே நாட்டுக்குள்ளும் சர்வதேசத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத ரீதியில் பௌத்தர்களை கொள்ளையடிக்கும் முயற்சிகள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. எமது பிள்ளைகள் போதைவஸ்துக்கள் மற்றும் மதுபாவனை உட்பட ஒழுக்கக்கேடான பாதைகளில் பயணிக்கின்றனர்.
கொழும்பை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த போதைவஸ்துக்கள் இன்று எமது கிராமங்களுக்கும் வியாபித்துள்ளது. சில அடிப்படைவாதக் குழுக்கள் இதனை திட்டமிட்டு சூட்சுமமாக முன்னெடுக்கின்றன.
சர்வ மத அமைப்புக்கள் என்பது ஒவ்வொருவரது தனிப்பட்ட தேவைகளுக்கான நிகழ்ச்சி நிரலுக்காக தயாரிக்கப்படுகின்றது.
இதனால் பௌத்தர்களுக்கு நன்மையில்லை. எனவே நாம் பௌத்தர்களை பாதுகாக்கும் திட்டங்களை தயாரித்து வருகின்றோம் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.virakesari
0 comments :
Post a Comment