எம். பைஷல் இஸ்மாயில் -
ஒலுவில் பிரதேசத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் வீடொன்றில் அத்துமீறி நுளைந்து பெண்களை அச்சுறுத்த முற்பட்ட கடற்படை வீரா் ஒருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டபோது அருகி்ல் இருந்த கடற்படை முகாமிலுள்ள வீரா்களால் அந்த கடற்படை உத்தியோகத்தர் விடுவிக்கப்பட்டதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒலுவில் பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் ஒன்று கூடி கடற்படை முகாம் அதிகாரிகளுக்கெதிராக கோசமிட்டதுடன் பெண்களை அச்சுறுத்திய குறிப்பிட்ட கடற்கடை அதிகாரியை உடனடியாக பொலிஸார் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விட்டதுடன் கடற்படை முகாமை இங்கிருந்து அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
வீதியில் டயர்கள் போட்டு எரித்து பொதுமக்கள் தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டனர். இவ்விடயம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ. அன்ஸிலுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து ஸ்தலத்திற்கு உடனடியாக விஜயம் செய்த தவிசாளர் அன்ஸில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை பொலிஸாருக்கும், கடற்படையினருக்கும் தெளிவுபடுத்தியதுடன், குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட கடற்படை அதிகாரியை பொலிஸார் கைது செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும், குறிப்பிட்ட கடற்படை அதிகாரியை கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு சென்றனர்.
சம்பவ இடத்தில் இருந்து நிலைமைகளை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, அம்பாரை மாவட்ட பிரஜைகள் அமைப்பின் தவிசாளர் அன்வர் நௌசாட் ஆகியோர் கையாண்டனர்.
தவிசாளர் அன்ஸில் மற்றும் பிரஜைகள் அமைப்பின் தவிசாளர் அன்வர் நௌசாட் ஆகியோர் சம்பவ நிகழ்வை கையாண்ட முறை பலராலும் பாராட்டப்பட்மை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment